Job Vacancy: நிரந்தர அரசு பணிக்கு நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு! 10th முடித்திருந்தாலே போதும்.! உடனே அப்ளை பண்ணுங்க.!

Published : Dec 17, 2025, 07:03 AM IST
Job vacancy

சுருக்கம்

கிருஷ்ணகிரி மாவட்ட அரசுப் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் 146 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  இந்த நிரந்தர அரசுப் பணிக்கு எழுத்துத் தேர்வு இன்றி, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்றே கடைசி! உடனே விண்ணப்பிக்க வேண்டும் மக்களே!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக கிருஷ்ணகிரி சத்துணவு அமைப்பாளர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். R.C.No.8644/2025/X1 என்ற அறிவிப்பின் மூலம் மொத்தம் 146 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள், அதிகாரப்பூர்வ இணையதளமான krishnagiri.nic.in மூலம் விண்ணப்பப் படிவத்தை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் 17.12.2025க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த வேலை தமிழ்நாடு அரசு வேலை பிரிவின் கீழ் நிரந்தர அடிப்படையில் வழங்கப்படுகிறது. பணியிடம் முழுவதும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் இருக்கும். இந்த வேலைக்கு ஆன்லைன் விண்ணப்பம் இல்லை என்பதால், விண்ணப்பதாரர்கள் நேரில் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். சமையல் உதவியாளர் பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி போதுமானது. மேலும், தமிழ் மொழியை வாசிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் சத்துணவு மையத்திலிருந்து விண்ணப்பதாரரின் குடியிருப்பு 3 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் இருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பளம் மற்றும் வயது விவரம்

வயது வரம்பைப் பொருத்தவரை, ST பிரிவைச் சேர்ந்தவர்கள் 18 முதல் 40 வயது வரையும், விதவை அல்லது கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் 20 முதல் 40 வயது வரையும், பொது பிரிவு மற்றும் SC பிரிவைச் சேர்ந்தவர்கள் 21 முதல் 40 வயது வரையும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி தகுதியுள்ளவர்களுக்கு வயது தளர்வு வழங்கப்படும். இந்த பணிக்கான சம்பளமாக ரூ.3000 முதல் ரூ.9000 வரை லெவல்–1 அடிப்படையில் வழங்கப்படும். தேர்வு முறை குறுக்கப்பட்ட பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் நடைபெறும். எழுத்துத் தேர்வு எதுவும் இல்லை என்பதால், தகுதியுடைய பெண்களுக்கு இது நல்ல வேலைவாய்ப்பாகும்.

நேரில் சமர்ப்பிப்பது கட்டாயம்

விண்ணப்பத்தை முறையாக நிரப்பிய பிறகு, அதனை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அல்லது கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்று, SSLC மதிப்பெண் பட்டியல், குடும்ப அட்டை, இருப்பிட அல்லது பூர்வீக சான்று, ஆதார் அட்டை, சமூக சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை இணைக்க வேண்டும். தேவையெனில் விதவை, ஆதரவற்ற பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்களையும் சமர்ப்பிக்கலாம்.

கிராமப்புற பெண்கள் மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேற விரும்பும் பெண்களுக்கு இந்த சமையல் உதவியாளர் வேலை ஒரு சிறந்த வாய்ப்பாகும். விண்ணப்பிக்க விரும்புவோர் கடைசி தேதியை தவறவிடாமல், அறிவிப்பை முழுமையாக வாசித்து தங்கள் தகுதியை உறுதி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Training: வேலைக்கு போக வேண்டாம்! வீட்டிலிருந்தே ரூ.30,000 சம்பாதிக்க இலவச தையற்கலை பயிற்சி! எங்கு நடக்குது தெரியுமா?
UGC, AICTE-க்கு முற்றுப்புள்ளி! புதிய மசோதாவில் நிதி வழங்கும் அதிகாரம் இல்லை, ஆனால் அபராதம் ரூ.2 கோடி வரை!