வேலை இல்லையா? கவலை வேண்டாம்! கனரா வங்கி கொடுக்கும் பொன்னான வாய்ப்பு - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Published : Mar 05, 2023, 10:02 AM IST
வேலை இல்லையா? கவலை வேண்டாம்! கனரா வங்கி கொடுக்கும் பொன்னான வாய்ப்பு - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சுருக்கம்

கனரா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய அறிப்பை ஒன்றை வங்கி வெளியிட்டுள்ளது.  

பொதுத்துறை வங்கிகளில் ஒன்று கனரா வங்கி. கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இந்த வங்கி செயல்படுகிறது. தற்போது இந்த வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

பணியின் பெயர்: Group Chief Risk Officer, Chief Digital Officer and Chief Technology Officer

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: 

கனரா வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து horecruitment@canarabank.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

10ம் வகுப்பு படித்தால் போதும்.. மாதம் ரூ.15,000 சம்பளத்தில் காத்திருக்கிறது தமிழக அரசு வேலை !!

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பதார்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் நாளை (06.03.2023) மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு வங்கி வெளியிட்டுள்ளா அதிகாரபூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு.... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

TN TRB Assistant Professor: தேர்வர்களே அலர்ட்.. வெளியானது உதவி பேராசிரியர் தேர்வு ஹால் டிக்கெட்! டவுன்லோட் லிங்க் இதோ!
Free Training: லட்சங்களில் வருமானம் தரும் தேன்.! 7 நாள் இலவச பயிற்சி! மிஸ்பண்ணாதிங்க.!