380 ஆயிரம் கோடி நன்கொடை அளித்த உலகின் பெரும்பணக்காரர்! யார் இந்த வாரன் பஃபெட்?

Published : Jun 23, 2023, 04:10 PM IST
380 ஆயிரம் கோடி நன்கொடை அளித்த உலகின் பெரும்பணக்காரர்! யார் இந்த வாரன் பஃபெட்?

சுருக்கம்

பிரபல பெரும்பணக்காரரான வாரன் பஃபெட், இன்று 5 தொண்டு நிறுவனங்களுக்கு 380 ஆயிரம் கோடி நன்கொடை அளித்துள்ளார்.

உலகின் பெரும்பணக்காரர்களில் ஒருவரும், பிரபல முதலீட்டாளருமான வாரன் பஃபெட், $4.64 பில்லியன் மதிப்புள்ள தனது நிறுவனத்தின் பங்குகளை நன்கொடையாக அளித்துள்ளார். இந்த நன்கொடையானது வாரன் பஃபெட் தனது முதலீட்டு நிறுவனமான பெர்க்ஷயர் ஹாத்வேயிடமிருந்து அதன் பங்குகளை ஆண்டுதோறும் அகற்றும் பகுதியாகும். பெர்க்ஷயரின் கிளாஸ் B பங்குகளில் சுமார் 13.7 மில்லியன்களைக் கொண்ட அவரது மிகப்பெரிய வருடாந்திர நன்கொடை இதுவாகும்.

யார் இந்த வாரன் பஃபெட்?

92 வயதான வாரன் பஃபெட் ஒரு பிரபலமான முதலீட்டாளர் ஜாம்பவான் ஆவார். அவர், திறமையான மற்றும் சந்தர்ப்பவாத வர்த்தகத்திற்கு பெயர் பெற்றவர். அவரது நிறுவனமான பெர்க்வே ஹாத்வே Berkway Hathaway பெரிய வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களில் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து வளர்ந்து வரும் நிறுவனங்கள் வரை பங்குகளைக் கொண்டுள்ளது.

ஊழியர்கள் Form 16 இல்லாமலே வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யலாம்.. எப்படி தெரியுமா?

ஃபோர்ப்ஸின் தரவரிசையின்படி, வாரன் பஃபெட் தற்போது $117.3 B என்ற பெரும் செல்வத்துடன் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார். அவர் Berkshire Hataway நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். தனது முதலீட்டுத் திறமையால் 'ஓமாஹாவின் ஆரக்கிள்' என்று பிரபலமாக அறியப்படுகிறார்.

வாரன் பஃபெட், தனது செல்வத்தில் 99% நன்கொடை அளிப்பதாக உறுதியளித்துள்ளார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அவர் இதுவரை சுமார் $51 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை, பெரும்பாலும் பில் கேட்ஸ் அறக்கட்டளை நன்கொடையாக அளித்துள்ளார். சுவாரஸ்யமாக, தனது 51 வயதிற்குப் பிறகு வால் ஸ்ட்ரீட்டில் முதலீடு செய்வதன் மூலம் தனது செல்வத்தின் பெரும்பகுதியை வாரன் பஃபெட் பெற்றார்.

எந்த நிறுவனத்திற்கு எவ்வளவு பங்குகள் கொடுக்கப்பட்டது?

வாரன் பஃபெட்டின் சமீபத்திய வருடாந்திர நன்கொடையின் பெரும்பகுதி பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு செல்கிறது, இது 10.45 மில்லியனுக்கும் அதிகமான பங்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது பெர்க்ஷயர் பங்குகளின் மொத்த பங்குகளில் சுமார் $39 பில்லியன் குவிந்துள்ளது. மேலும், அவர் சூசன் தாம்சன் பஃபெட் அறக்கட்டளைக்கு 1.05 மில்லியன் பங்குகளை நன்கொடையாக வழங்குகிறார்.

பில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் இடையேயான நட்பு

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் பெர்க்ஷயர் ஹாட்வே தலைமை நிர்வாக அதிகாரி வாரன் பஃபெட் இருவரும் நல்ல நண்பர்களாக உள்ளனர்.  இருவரும் அடிக்கடி ஒன்றாக நேரத்தை செலவிடுவார்கள் என்று கூறப்படுகிறது. வாரன் பஃபெட் தனது பெர்க்ஷயர் ஹாத்வேயின் பங்குகளில் பெரும்பகுதியை பில் கேட்ஸ் மற்றும் அவரது முன்னாள் மனைவி ஒத்துழைப்பு அறக்கட்டளையான 'பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை'க்கு வழங்கினார், இது உலகம் முழுவதும் பசி, வறுமை, நோய் மற்றும் சமத்துவமின்மையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது நினைவுக்கூறத்தக்கது.

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு அதிரடியாக இன்று வீழ்ச்சி; காரணம் இதுதான்!!

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Gold Rate: நடுத்தர மக்களுக்கு கிடைத்த குட் நியூஸ்.! அடுத்த 6 மாதத்திற்கு தங்கம் விலை குறித்த கவலை வேண்டாம்.!
தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க