ஓய்வூதியதார்களுக்கு பயன் அளிக்கும் சிஸ்டமேடிக் வித்ரால் பிளான்!!

Published : Dec 09, 2024, 02:52 PM ISTUpdated : Dec 09, 2024, 03:08 PM IST
ஓய்வூதியதார்களுக்கு பயன் அளிக்கும் சிஸ்டமேடிக் வித்ரால் பிளான்!!

சுருக்கம்

ஓய்வு பெற்றவர்களுக்கு போதிய வருமானம் ஈட்டும் வழிகள் குறித்து இந்த கட்டுரை விளக்குகிறது. குறைந்த வட்டி விகித டெபாசிட் திட்டங்களுக்கு மாற்றாக, சிஸ்டமேடிக் வித்ரால் பிளான் (SWP) போன்ற திட்டங்கள் மூலம் ஓய்வுக் காலத்தில் தேவையான நிதியைப் பெறலாம்.

ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வுக் காலத்தில் தங்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு என்று நிதி தேவைப்படுகிறது. இதை எவ்வாறு அவர்கள் எதிர்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

ஓய்வுபெற்றவர்களுக்கு என்று பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் இருந்து அவர்களுக்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை. சேமிப்பு திட்டங்கள், டெபாசிட் திட்டங்கள் இருந்த போதிலும், அவர்களுக்கு போதிய வருமானம் இருப்பதில்லை. அதிக டெபாசிட் மீதும் குறைந்த வட்டிதான் கிடைக்கிறது. பாதுகாப்பாக நீண்ட நாட்களுக்கு அதிக வருமானம் கொடுக்கும் திட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றின் மூலம் அவர்கள் தங்களது ஓய்வுக் காலத்திலும், லைப் ஸ்டலை நன்றாக வைத்துக் கொள்ள முடியும். இதற்கு ஏற்றது தான் சிஸ்டமேடிக் வித்ரால் பிளான் (SWP -  Systematic Withdrawal Plan).

மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து  சிஸ்டமேடிக் வித்ரால் பிளான் (SWP) ஓய்வு பெற்றவர்களுக்கு அவர்களின் ஓய்வூதிய வருமானத்தை நிர்வகிக்க ஒரு சமமான அணுகுமுறையை வழங்குகிறது. ஒரு SWP மூலம், உங்களது முதலீடு தொடர்ந்து வளர்ந்து வரும் போது, ​​நீங்கள் ஒரு தொகையை அவ்வப்போது எடுத்துக் கொள்ளலாம். இது ஓய்வு பெற்றவர்கள் தங்களது மாதாந்திர செலவினங்களை சமாளித்துக் கொள்வதுடன், காலப்போக்கில் அவர்களது முதலீட்டையும் பாதுகாக்க உதவுகிறது. 

இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் ஒரு குறிப்பிட்ட பிக்சட் நிதியை மாத மாதம் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை என்று எடுத்துக் கொள்ளலாம். காலாண்டுக்கு ஒரு முறை என்பது கணிசமான நிதியை வழங்கும். இந்த திட்டத்தில் இருக்கும் மிகப்பெரிய நன்மையே நீங்கள் எடுக்கும் நிதியை ஆண்டு பணவீக்கத்திற்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம் என்பதுதான். எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. நீங்கள் மாதத்திற்கு ரூ. 25,000 திரும்பப் பெற்று, அது ஒவ்வொரு ஆண்டும் 3% என்ற விகிதத்தில் வளர விரும்பினால், 6% வருடாந்திர வருமானத்திற்கு உங்களுக்கு ரூ.70 லட்சம் திட்டத்தில் வைத்திருக்க வேண்டும். 

அதிக வருமானம் தரும் முதலீட்டை நீங்கள் தேர்வு செய்தால், தேவையான முதலீட்டு நிதியின் அளவு குறைவாக இருக்கும். 8% வருடாந்திர வருமானம் பெறுவதற்கு, உங்களுக்கு ரூ. 51 லட்சமும், 10% வருமானம் பெறுவதற்கு ரூ.41 லட்சமும் மட்டுமே தேவை. இந்த அணுகுமுறை, உங்கள் சேமிப்பை குறைக்காமல், காலப்போக்கில் உங்கள் வருமானம் அதிகரிப்பதை உறுதி செய்கிறது.

குறைந்த வருமானம் அல்லது வட்டி விகிதங்களைக் கொண்ட பிக்சட் டெபாசிட் தொகைகளை வழங்கும் வருடாந்திர திட்டங்களைப் போலன்றி, SWP சந்தை செயல்திறன் மற்றும் பணவீக்கத்திற்கு ஏற்ப ஓய்வு பெற்றவர்கள் தங்கள் பணத்தை திரும்பப் பெற அனுமதிக்கிறது என்பது சிறப்பம்சமாகும். மேலும் முதலீட்டின் மீது கிடைக்கும் வருமானத்திற்குத்தான் நீங்கள் வரி செலுத்த வேண்டியது இருக்கும். ஆனால், நீங்கள் மாத மாதம் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை எடுக்கும் நிதிக்கு வரி செலுத்த வேண்டியதில்லை.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

AI City Rising: பாலைவனத்தில் உருவாகும் பிரமாண்ட "ஏஐ" தொழில் நகரம்.! அரபு நாடுகளில் உருவாகிறதா "போட்டி" சிலிகன் வேலி?!
Business Loan: ஸ்டார்ட்-அப்பா? தொழில் கனவா? கடன் பெற ஷார்ட் கட் இதுதான்!