மத்திய  பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ந்தேதி தொடக்கம் ; குடியரசுத் தலைவர் அறிவிப்பு

 
Published : Jan 07, 2017, 09:37 PM ISTUpdated : Sep 19, 2018, 02:57 AM IST
மத்திய  பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ந்தேதி தொடக்கம் ;  குடியரசுத் தலைவர் அறிவிப்பு

சுருக்கம்

புதுடெல்லி, ஜன. 7-

2017-18-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ந்தேதி தொடங்குகிறது.

மாநிலங்கள் அவையைக் கூட்டுவதற்கான முறைப்படியான அறிவிப்பை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று வெளியிட்டார்.

அதேசமயம், மக்கள் அவையை கூட்டுவதற்கு மக்களவைச் செயலாளர் இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை.

வழக்கமாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் இரு அவைகளையும் கூட்டி குடியரசுத் தலைவர் உரையாற்றுவார். அன்றைய தினமே, நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

இந்த ஆண்டு ரெயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்படாமல், பொது பட்ஜெட்டுடன் இணைத்து தாக்கல் செய்யப்படுகிறது. ஆதலால், பட்ஜெட் பிப்ரவரி முதல்தேதி தாக்கல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

ஆனால், 5 மாநிலத் தேர்தல் வாக்குப் பதிவு பிப்ரவரி 4-ந்தேதி தொடங்கி, மார்ச் 8-ந் தேதி வரை நடக்கிறது. தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்துவிட்டதால், பட்ஜெட் தாக்கல் தேதியை மார்ச் 11-ந்தேதிக்கு பின் வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளன.

இது தொடர்பாக அமைச்சரவைச் செயலாளர் பி.கே.சின்ஹா பதில் அளிக்கக் கோரி தேர்தல் ஆணையமும் கடிதம் எழுதியுள்ளது. இந்த சூழ்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

இன்ஜெக்‌ஷன் தேவையில்லை.. சிப்லாவின் Afrezza இன்சுலின் இந்தியாவில் அறிமுகம்
Egg Price: முட்டை வாங்கப் போறீங்களா?! முதல்ல இதை படிங்க.! - நாமக்கல் ஷாக் நியூஸ்!