third party insurance hike :மோட்டார் சைக்கிள், கார், கனரக வாகனங்கள், பேட்டரி கார்கள் ஆகியவற்றுக்கான 3-ம் நபர் காப்பீடு ப்ரீமியம் கட்டணம் உயர்வு நாளை(ஜூன்1) முதல் அமலுக்கு வருகிறது.
மோட்டார் சைக்கிள், கார், கனரக வாகனங்கள், பேட்டரி கார்கள் ஆகியவற்றுக்கான 3-ம் நபர் காப்பீடு ப்ரீமியம் கட்டணம் உயர்வு நாளை(ஜூன்1) முதல் அமலுக்கு வருகிறது.
3 ஆண்டுகளுக்குப்பின்
கடந்த 2019ம் ஆண்டுக்குப்பின் 3 ஆண்டுகளுக்குப்பின் 3ம் நபர் காப்பீடு ப்ரீமியம் கட்டணம் உயர்கிறது. பேட்டரியில்முழுமையாக இயங்கும் வாகனங்கள், ஹைபிரிட் வாகனங்கள், கல்வித்துறையில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களுக்கு தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
3-ம் நபர் காப்பீடு
3-ம் நபர் காப்பீடு என்பது அனைத்து வாகனங்களுக்கும் எடுக்கும் காப்பீட்டைவிட இது முக்கியமாகும். வாகனக் காப்பீடு வாகனத்துக்கான சேதத்துக்கு மட்டுமே இழப்பீடு தரும், அந்த வாகனத்தால் விபத்தில் ஒருவருக்கு ஏற்படும் காயத்துக்கும், உயிரிழப்புக்கும் இழப்பீடு வராது. ஆதலால்தான் தேர்டு பார்டி இன்சூரன்ஸ் எடுப்பது கட்டாயமாகிறது. வாகனக் காப்பீடு எடுப்பதைவிட தேர்டு பார்டி இன்சூரன்ஸ் மிகவும் முக்கியமாகும்.
மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கார்களுக்கான காப்பீடு
இருசக்கர வாகனங்கள்
பேட்டரி கார்கள்
பேட்டரி டூவீலர்கள்
சலுகை:
எலெக்ட்ரிக் கார்களுக்கு 15 சதவீதம் ப்ரீயமியத்தில் தள்ளுபடியும், மற்றும் ஹைபிரிட் வகை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 7 சதவீதம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கான வாகனங்களுக்கு காப்பீடு 15 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது
சரக்கு வாகனங்கள்
இவ்வாறு சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது