“ரெய்டில் மாட்டினால் அவ்ளோ தான் “உச்சகட்ட வரியுடன், அபராதம் “.....!!!
கருப்பு பணம் வைத்திருப்பவர்களை, தற்போது வருமானவரித்துறையினர் சோதனையிட்டு வருகின்றனர்.அவ்வாறு ரெய்டு வரும் போது, அது கருப்பு பணம் என நிரூபிக்கபட்டால் , 137.25 %( 60 சதவீத வரி, 60 சதவீத அபராதம், 15 சதவீத கூடுதல் கட்டணம் வரி ) என , வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி,
ரெய்டு வரும் போது, அந்த பணம் கணக்கில் காட்டபடாமல் இருந்தால், அதற்குண்டான வரியை செலுத்திய வேண்டும் என்றும், அதே சமயத்தில், ஒரு வேளை , அந்த பணம் கருப்பு பணம் தான் என ஒப்புக்கொண்டாலும் , அதற்கு 107.25 சதவீதம் வசூலிக்கப்படும் என வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது மத்திய அரசு கருப்பு பணத்தை ஒப்படைக்க கால அவகாம் வழங்கியுள்ளது. அதன்படி, டிசம்பர் 17 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளதால் , கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் (பழைய பணம்), தாமாகவே முன்வந்து ஒப்படைத்தால், 50 சதவீத அபராதம் மட்டுமே விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே கருப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு என்பது மேலும் ஒரு கூடுதல் தகவல் .