sovereign gold bond scheme : தங்கப் பத்திரம் விற்பனை இன்று தொடக்கம்: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்

Published : Jun 20, 2022, 08:17 AM IST
sovereign gold bond scheme : தங்கப் பத்திரம் விற்பனை இன்று தொடக்கம்: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்

சுருக்கம்

sovereign gold bond scheme :2022ம் ஆண்டுக்கான தங்கப்பத்திரம்(sovereign gold bond scheme )  விற்பனைத் திட்டம் இன்று தொடங்கி 24ம் தேதி வரை நடக்கிறது.  தங்கப்பத்திரங்கள் வாங்குவோருக்கு வரும் 28ம்தேதி தங்கப்பத்திரங்கள் வழங்கப்படும்.

sovereign gold bond scheme :2022ம் ஆண்டுக்கான தங்கப்பத்திரம்(sovereign gold bond scheme )  விற்பனைத் திட்டம் இன்று தொடங்கி 24ம் தேதி வரை நடக்கிறது.  தங்கப்பத்திரங்கள் வாங்குவோருக்கு வரும் 28ம்தேதி தங்கப்பத்திரங்கள் வழங்கப்படும்.

எப்போது அறிமுகம்?
கடந்த 2015ம் ஆண்டில் தங்கப்பத்திரம் சேமிப்புத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. உண்மையான தங்கத்தின் பயன்பாட்டைக் குறைக்கவும், அதேசமயம், தங்கத்தின் மதிப்புக்கு உரிய பலன் அளிக்கவும் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. 

2022 நிதியாண்டு சீரிஸ்

கடந்த 7 ஆண்டுகளாக  தொடர்ந்து தங்கப்பத்திரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ரிசர்வ் வங்கி 2022நிதியாம்டுக்கான முதலாவது சீரிஸ் தங்கப்பத்திரங்களை இன்று( 20ம் தேதி) முதல் 24ம் தேதிவரை விற்பனை செய்கிறது.

ஒரு கிராம் விலை எவ்வளவு

இந்த தங்கப்பத்திரம் சேமிப்புத் திட்டத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,091 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 99 சதவீதம் சுத்ததங்கத்தின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

தள்ளுபடி

ஆன்-லைன் மூலம் தங்கப்பத்திரத்துக்கு விண்ணப்பம் செய்வர்களுக்கு கிராம் ஒன்றுக்கு ரூ.50 தள்ளுபடி தரவும் ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ள்ளது. அவ்வாறு ஆன்-லைனில் விண்ணப்பித்தால் அவர்களுக்கு கிராம் ரூ.5,041 ஆக நிர்ணயிக்கப்படும்.

6 மாதத்துக்கு ஒருமுறை வட்டி

தங்கத்தை பொருளாக வைக்காமல் டிஜிட்டல் முறையில் வைப்பதால், பாதுகாப்பது எளிதானது. 6 மாதத்துக்கு ஒருமுறை 2.5 % வட்டித்தொகை கணக்கில்  செலுத்தப்படும், 8  ஆண்டுகளுக்குப்பின் அன்றைய தங்கத்தின் விலைக்கு நிகாரக  பணம்கிடைக்கும்.

எப்படி வாங்கலாம்

இந்த தங்கப்பத்திரத்தை வாங்க விருப்பம் உள்ளவர்கள், பான்கார்டு, ஆதார் கார்டு, வங்கி கணக்குப்புத்தகம், அடையாள அட்டை இதில்ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். இதில் ஏதாவதுஒன்றின் நகலை எடுத்து, தபால் நிலையத்தில் வழங்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தங்கப்பத்திரத்தை வாங்கிக்கொள்ளலாம்.

2-வது சீரிஸ்

2-வது கட்ட தங்கப்பத்திரங்கள் விற்பனை ஆகஸ்ட் 22ம் தேதிமுதல் 26ம் தேதி வரை நடக்கிறது. 2021-22ம்ஆண்டில் 10 தவணைகளில் தங்கப்பத்திரங்கள் ரூ.12,991 கோடிக்கு, (தங்கத்தின் எடைமதிப்பில் 27 டன் விற்பனை) விற்கப்பட்டது.

ரூ.13 ஆயிரம் கோடி
2021-22ம் ஆண்டில் 10 சீரிஸ்களாகத் தங்கப்பத்திரம் விற்பனை செய்யப்பட்டு ரூ.12,991 கோடிக்கு தங்கப்பத்திரங்கள் விற்பனையாகின.

எவ்வளவு வாங்கலாம்

தங்கப்பத்திரம் தங்கத்தின் மதிப்பில் ஒருநபர் 4 கிலோ வரை வாங்கலாம். இந்துகூட்டுக்குடும்பத்தினர் 4 கிலோ, அறக்கட்டளை, நிறுவனங்கள் ஒரு நிதியாண்டுக்கு 20 கிலோ வரை வாங்கலாம்

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு