
சங்கீதா மொபைல்ஸ், தென்னிந்தியா முழுவதும் நிகரற்ற சலுகைகள், பாதுகாப்பு பயன்கள் மற்றும் மெகா பரிசுகளுடன் தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய 52-வது ஆண்டுவிழா விற்பனையை கொண்டாடுகிறது.
மொபைல் கடைக்குள் நுழைவதால் மட்டுமே வாடிக்கையாளர்கள் ₹6,000 வரை பலன்களைப் பெறலாம். அத்துடன் சேதப் பாதுகாப்பு (Damage Protection), திருட்டுப் பாதுகாப்பு (Theft Protection), சைபர் இன்சூரன்ஸ், டோர்ஸ்டெப் சர்வீஸ் மற்றும் மெகா பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
இந்தியாவின் முன்னணி ஆம்னி-சேனல் (omni-channel) எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மொபைல் ரீடெய்ல் நிறுவனமான 'சங்கீதா', மே 31 முதல் தனது பிரம்மாண்டமான 52-வது ஆண்டுவிழா விற்பனையைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இதனைத் தங்களின் "வரலாற்றிலேயே மிகப்பெரிய மற்றும் அதிக பரிசுகளை வழங்கும் விற்பனை" என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஒரு மாதம் முழுவதும், அனைத்து நகரங்களிலும் உள்ள எல்லா சங்கீதா கிளைகளிலும் கிடைக்கவிருக்கும் இந்த ஆண்டுவிழாக் கொண்டாட்டம், இதுவரை இல்லாத அளவிலான வாடிக்கையாளர் சலுகைகள், பாதுகாப்புத் திட்டங்கள், அற்புதமான பரிசுகள் மற்றும் சுலபமான தவணை முறை (EMI) வசதிகள் ஆகியவற்றை ஒரு சேர வழங்குகிறது. இது நாட்டின் நுகர்வோர் நலன் சார்ந்து நடைப்பெறும் சில்லறை விற்பனைத் திருவிழாக்களில் மிகச்சிறந்ததாக பார்க்கப்படுகிறது.
• சங்கீதா கடைக்கு நேரடியாக வரும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.6,000 வரை வழங்கப்படுகின்றன
• சங்கீதாவில் வாங்கப்படும் மொபைல் ஃபோன்களுக்கு 24 மாத கால சேதப் பாதுகாப்பு (Damage Protection).
• மொபைல் ஃபோன்களுக்கு 365 நாட்களுக்கான திருட்டு மற்றும் இழப்புப் பாதுகாப்பு (Theft & Loss Protection).
• ₹50,000 மதிப்புள்ள சைபர் திருட்டு காப்பீடு (Cyber Theft Insurance Cover).
• சங்கீதாவில் வாங்கப்படும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 365 நாட்களுக்கான டோர்ஸ்டெப் சர்வீஸ் (வீட்டுக்கே வந்து பழுதுபார்க்கும் சேவை).
• தகுதியுடைய பழைய ஃபோன்களுக்கு ₹5,000 வரை எக்ஸ்சேஞ்ச் மதிப்பு.
• தகுதியுடைய கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு 24 மாதங்கள் வரை 0% வட்டி இல்லாத சுலபத் தவணை முறை (EMI).
இந்த ஆண்டுவிழா கொண்டாட்டமானது, வெறும் தள்ளுபடிகளையும் தாண்டி, நிகரற்ற பாதுகாப்பு மற்றும் சேவை பலன்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான மனநிறைவை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
"கடந்த 52 ஆண்டுகளாக, வாடிக்கையாளர்கள் சங்கீதாவை சிறந்த பொருட்கள் மற்றும் அவைகளின் நியாயமான விலைகளுக்காக மட்டுமின்றி, ஒவ்வொரு முறை பொருட்களை வாங்கும் போதும் அவர்களுக்குக் கிடைக்கும் மிகச்சிறந்த சேவை அனுபவத்திற்காகவும் நம்பியுள்ளனர். இந்த ஆண்டுவிழாக் கொண்டாட்டம், வாடிக்கையாளர்களுக்கு எங்களால் இயன்ற வழியில் நன்றியைத் தெரிவிக்கும் ஒரு முயற்சியாகும். இதுவரை இல்லாத பாதுகாப்பு பலன்கள் முதல் பரிசுகள், எக்ஸ்சேஞ்ச் சலுகைகள், டோர்ஸ்டெப் சர்வீஸ் மற்றும் அற்புதமான பரிசுகள் வரை, ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிகரற்ற மதிப்பை வழங்கும் ஓர் ஆண்டுவிழாத் திருவிழாவை உருவாக்க நாங்கள் விரும்பினோம்."
அவர் மேலும் கூறுகையில்:
"இன்றைய சூழலில் தொழில்நுட்பம் என்பது தனிப்பட்ட ரீதியிலும் அன்றாட வாழ்க்கையிலும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. எங்களின் நோக்கம் சாதனங்களை விற்பது மட்டுமல்ல, வாடிக்கையாளர்கள் தாங்கள் அவற்றை வாங்கிய பிறகும் நீண்ட காலத்திற்குப் பாதுகாப்பாகவும், ஆதரவாகவும், நன்மைகளைப் பெறுபவர்களாகவும் உணர்வதை உறுதி செய்வதாகும். இந்த ஆண்டுவிழாக் கொண்டாட்டம் அந்தத் கருத்தை ஒட்டியே உருவாக்கப்பட்டது."
இந்த 52-வது ஆண்டுவிழா விற்பனை மே 31 அன்று தொடங்கி, அனைத்து சங்கீதா கிளைகளிலும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.
சங்கீதா பற்றி:
50 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியம் கொண்ட சங்கீதா, பல நகரங்களில் வலுவான ஆம்னி-சேனல் இருப்பைக் கொண்டுள்ள, தென்னிந்தியாவின் முன்னணி மொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ரீடெய்ல் நிறுவனங்களில் ஒன்றாகும். வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறை, நம்பகமான சேவை மற்றும் புதுமையான சில்லறை விற்பனை அனுபவங்களுக்குப் பெயர் பெற்ற சங்கீதா, உலகின் முன்னணி பிராண்டுகளின் மொபைல்கள், கேட்ஜெட்டுகள், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்குகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.