இந்திய விருந்தோம்பல் துறையின் முக்கியமான நபர், ஓபராய் குரூப் தலைவர் பிஆர்எஸ் ஓபராய் காலமானார்..

Published : Nov 14, 2023, 09:29 AM ISTUpdated : Nov 14, 2023, 09:43 AM IST
இந்திய விருந்தோம்பல் துறையின் முக்கியமான நபர், ஓபராய் குரூப்  தலைவர் பிஆர்எஸ் ஓபராய் காலமானார்..

சுருக்கம்

இந்திய விருந்தோம்பல் துறையின் முக்கியமான நபர், ஓபராய் குழுமத்தின் தலைவருமான பிருத்வி ராஜ் சிங் ஓபராய் நவம்பர் 14 காலை காலமானார். அவருக்கு வயது 94.

ஓபராய் குழுமத்தின் தலைவரான பிஆர்எஸ் ஓபராய் செவ்வாய்க்கிழமை காலை காலமானார். ஓபராய் குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் இந்த தகவலை தெரிவித்தார்.. பிஆர்எஸ் ஓபராய் இந்தியாவில் ஹோட்டல் வணிகத்தின் முகத்தை மாற்றியமைத்தவர். 1929 ஆம் ஆண்டு புது தில்லியில் பிறந்தபிஆர்எஸ் ஓபராய், தி ஓபராய் குழுமத்தின் முதன்மை நிறுவனமான EIH லிமிடெட்டின் செயல் தலைவராக இருந்தார். EIH லிமிடெட்டின் முக்கிய பங்குதாரரான Oberoi Hotels Private Limited இன் தலைவராகவும் இருந்தார். பிஆர்எஸ் ஓபராய், தி ஓபராய் குழுமத்தின் நிறுவனரான மறைந்த ராய் பகதூர் எம்எஸ் ஓபராயின் மகன் ஆவார்.

பிஆர்எஸ் ஓபராய் இந்தியா, இங்கிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்தில் படித்தார். பல நாடுகளில் உள்ள ஆடம்பர ஹோட்டல்களை நிர்வகிப்பதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதோடு, Oberoi ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகளின் வளர்ச்சிக்கு முன்னோடியாக பிஆர் எஸ் ஓபராய் முக்கிய பங்கு வகித்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

முக்கியமான நகரங்களில் பல சொகுசு ஹோட்டல்களைத் திறந்ததன் மூலம் சர்வதேச பயணிகளின் வரைபடத்தில் ஓபராய் ஹோட்டல்களை இடம்பிடித்த பெருமையை PRS ஓபராய் பெற்றார். ஜனவரி 2008 இல் ஓபராய்க்கு நாட்டின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷண் வழங்கப்பட்டது. சர்வதேச சொகுசு பயணச் சந்தை (ILTM) டிசம்பர் 2012 இல் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியது, அவரது வித்தியாசமான தலைமைத்துவம், தொலைநோக்குப் பார்வை மற்றும் வளர்ச்சிக்கான பங்களிப்பு ஆகியவற்றுக்கான உலகளாவிய அங்கீகாரமாக இருந்தது.

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை.. சிக்கிய 40 பணியாளர்கள்.. 3வது நாளாக தொடரும் மீட்பு பணி - அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

ஓபராய் குழுமம் உலகின் முன்னணி சொகுசு ஹோட்டல் சங்கிலிகளில் ஒன்றாகும். மே 3, 2022 அன்று EIH லிமிடெட் தலைவர் மற்றும் இயக்குநர் பதவியில் இருந்து PRS ஓபராய் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

SBI to Hire: ஸ்டேட் பேங்கில் செம்ம வேலை வாய்ப்பு... ஒவ்வொரு காலாண்டுக்கும் 16000 பேருக்கு வேலை..! 300 புதிய கிளை திறக்கப்படும்.!
AI City Rising: பாலைவனத்தில் உருவாகும் பிரமாண்ட "ஏஐ" தொழில் நகரம்.! அரபு நாடுகளில் உருவாகிறதா "போட்டி" சிலிகன் வேலி?!