
NSE CEO திடீர் ராஜினாமா......? ஏன் ?
1992-ம் ஆண்டு தேசிய பங்கு சந்தை {national stock exchange } ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்று முதலே பல முக்கிய பணியில் ஈடுபட்டு வந்தவர் தான் , என்.எஸ்இ யின் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா ...!
தற்போது அவர், அவரது பொறுப்பை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். இவருடைய பதவி காலம் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய பங்குச்சந்தையின் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ), இன்னும் சில மாதங்களில் வெளி யாக இருக்கிற சூழ்நிலையில் சித்ரா ராமகிருஷ்ணா ராஜினாமா செய்திருப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.இவருடைய ராஜினாமாவை அடுத்து தற்போது, தற்காலிக தலைமைச் செயல் அதிகாரியாக ஜே.ரவிச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
2013-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல்,என்எஸ்இ யின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் பொறுப்பை வகித்தவர் சித்ரா ராமகிருஷ்ணா என்பது குறிப்பிடத்தக்கது.....
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.