மாருதி சுசுகி எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. வெளியீட்டு விவரம்

Nandhini Subramanian   | Asianet News
Published : Jan 24, 2022, 03:30 PM IST
மாருதி சுசுகி எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. வெளியீட்டு விவரம்

சுருக்கம்

மாருதி சுசுகி நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலின் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

மாருதி சுசுகி நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் களமிறங்கும் பணிகளை துவங்கிவிட்டது. வரும் ஆண்டுகளில் இந்த திட்டத்தை செயல்படுத்த மாருதி சுசுகி திட்டமிட்டுள்ளது. மாருதி சுசுகி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார் மாடல்கள் பற்றிய விவரங்கள் மிக ரகசியமாக வைத்து இருக்கிறது. 

இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் மாருதி சுசுகி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை 2024 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் வை.வை.8 எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது இந்தியாவில் டாடா பன்ச் இ.வி. மாடலுக்கு போட்டியாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

மாருதி சுசுகி எலெக்ட்ரிக் கார் சுசுகி - டொயோட்டா நிறுவனங்கள் கூட்டணியின் கீழ் உருவாக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த மாடல் டொயோட்டா மற்றும் மாருதி சுசுகி பிராண்டிங்கில் விற்பனை செய்யப்படும். இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வெளிநாட்டு சந்தைகளிலும் இந்த மாடல் ஏற்றுமதி செய்யப்படலாம்.

இந்த எலெக்ட்ரிக் கார் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்ம் அல்லது டொயோட்டாவின் குறைந்த விலை டி.என்.ஜி.ஏ. மாட்யூலர் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படலாம். இரு பிளாட்ஃபார்ம்களும் இந்திய சந்தைக்கு ஏற்ப பலவிதங்களில் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளன. இதே பிளாட்ஃபார்ம் மாருதி சுசுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்களின் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடல்களில் பயன்படுத்தப்பட இருக்கிறது.

மாருதி சுசுகி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் முழு சார்ஜ் செய்தால் 250 முதல் 350 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலுக்கான பேட்டரி டொஷிபாவின் குஜராத் ஆலையில் இருந்து வாங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!