எவ்வளவு பணம் போட்டாலும் டபுள் ஆகும்! போஸ்ட் ஆபீஸில் முதலீடு செய்ய கிசான் விகாஸ் பத்திரம் இருக்கு!

Published : Feb 18, 2024, 01:39 PM ISTUpdated : Feb 18, 2024, 02:27 PM IST
எவ்வளவு பணம் போட்டாலும் டபுள் ஆகும்! போஸ்ட் ஆபீஸில் முதலீடு செய்ய கிசான் விகாஸ் பத்திரம் இருக்கு!

சுருக்கம்

கிசான் விகாஸ் பத்திரத்தில் குறைந்தபட்சம் ரூ. 1,000 முதலீடு செய்யவேண்டும். அதற்கு மேலும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். 115 மாதங்களில் முதலீட்டுத் தொகை இரட்டிப்பாகும். 

நல்ல வட்டியைப் பெறக்கூடிய நீண்ட கால முதலீட்டுத் திட்டத்தை தேடுபவர்களுக்கு கிசான் விகாஸ் பத்திரம் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகை 115 மாதங்களில் இரட்டிப்பாகும். இது தபால் துறையின் சிறந்த சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

கிசான் விகாஸ் பத்திரத்தில் 18 வயதைக் கடந்த அனைவரும் தனியாகவோ கூட்டாகவே கணக்கைத் தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும் தங்கள் பெயரில் இந்தக் கணக்கையும் ஆரம்பிக்கலாம். மைனர் அல்லது மனநிலை சரியில்லாத நபரின் பெற்றோர் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

கிசான் விகாஸ் பத்திர கணக்கைத் திறக்கும்போது, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் வயதுச் சான்றிதழ் நகல்கள் ஆகியவற்றுடன் இத்திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

எல்லாருக்கும் மாதம்தோறும் ரூ.5000 கிடைக்கும்! போஸ்ட் ஆபீஸ் வழங்கும் மாத வருவாய் திட்டம்!

கிசான் விகாஸ் பத்திரத்தில் குறைந்தபட்சம் ரூ. 1,000 முதலீடு செய்யவேண்டும். அதற்கு மேல் 100 இன் மடங்குகளில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். எந்த தபால் நிலையத்திலும் இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு திறக்கலாம்.

முதலீடு செய்யப்படும் தொகை 115 மாதங்களில் அதாவது ஒன்பதரை ஆண்டுகளில் இரட்டிப்பாகும். இதில் 7.5% வட்டி வழங்கப்படுகிறது. ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 115 மாதங்களுக்கு பிறகு ரூ.2 லட்சம் கிடைக்கும். ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால், ரூ.20 லட்சமாக மாறும்.

பங்குச் சந்தையின் ஏற்ற தாழ்வுகளால் கிசான் விகாஸ் பத்திரத் திட்டம் பாதிக்கப்டாது. இத்திட்டத்திற்கு அரசாங்க உத்திரவாதம் உள்ளது. முதலீடு பாதுகாப்பாக இருக்குமா என்று கவலைப்படத் தேவையில்லை.

115 மாதங்களுக்குப் பின் முதிர்வுத் தொகை கிடைக்கும். அதுவரை உங்கள் கணக்கில் தொடர்ந்த்து வட்டிப் பணம் கிடைத்துக் கொண்டிருக்கும். கிசான் விகாஸ் பத்திரம் மூலம் கடன் வாய்ப்பும் வசதியும் கிடைக்கும்.

ஏடிஎம் கார்டு மூலம் எல்லாருக்கும் இன்சூரன்ஸ் இருக்கு! ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 கோடி வரை! முழு விவரம் இதோ...

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

SBI to Hire: ஸ்டேட் பேங்கில் செம்ம வேலை வாய்ப்பு... ஒவ்வொரு காலாண்டுக்கும் 16000 பேருக்கு வேலை..! 300 புதிய கிளை திறக்கப்படும்.!
AI City Rising: பாலைவனத்தில் உருவாகும் பிரமாண்ட "ஏஐ" தொழில் நகரம்.! அரபு நாடுகளில் உருவாகிறதா "போட்டி" சிலிகன் வேலி?!