
2022-23ம் நிதியாண்டில் நாட்டில் 55 ஆயிரம் ப்ரஷர்களை கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைக்குத் தேர்வு செய்ய திட்டமிட்டிருப்பதாக இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெங்களூரில் நடந்த நாஸ்காம் ஆண்டு நிகழ்ச்சியில் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சலில் பரேக் நேற்றுபங்கேற்றார்.அப்போது அவர் பேசியதாவது:
ஐடி தொழில்நுட்பப் பிரிவில் பொறியியல் மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு படித்துவரும் இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புக் காத்திருக்கிறது. ஆனால், அவர்கள் எங்கள் சென்றாலும் குறுகிய காலத்தில் புதிய திறமைகளை வளர்த்துக்கொண்டு, உலகச்சூழலுக்கு வாழப்பழக வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
2022-23ம் நிதிஆண்டில் 55 ஆயிரம் ப்ரஷர்களை கல்லூரி வளாகத்துக்கே சென்று வேலைக்குத் தேர்வு செய்ய இன்போசிஸ் நிறுவநம் திட்டமிட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகமாகலாம். 2022ம் நிதியாண்டில் இன்போசிஸ்நிறுவனத்தின் வருவாய் 20 சதவீதம் உயர்த்த இலக்க வைத்திருக்கிறோம். ஆதலால், இளைஞர்கள் எங்கள் நிறுவனத்தில் சேர்ந்து அவர்களை வளர்க்கவும், நிறுவனத்தின் வளர்சிக்கு உதவவும் சரியானவாய்ப்பு இருக்கிறது
ஏராளமான திறமையான இளைஞர்களை நிறுவனம் எதிர்நோக்குகிறது. அந்த இளைஞர்களுக்கு 6 வாரங்கள் முதல் 12வாரங்கள்வரைதான் பயிற்சி அளிக்கப்படும். அதன்பின் நேரடியாக பணிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்
அதுமட்டுமல்லாமல் இன்போசிஸ் நிறுவனத்தில் ஏற்கெனவே பணியில் இருக்கும் ஊழியர்களின் திறமையை மெருகேற்றும் வகையில் பயிற்சித்திட்டமும், புதிய பிரிவுக்கு மாற்றிக்கொள்ளுதல், தங்கள் புதுப்பித்துக்கொள்ளும் திட்டமும் கொண்டுவர இருக்கிறோம்.
ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் அனுபமான ஊழியர்கள் தங்களை புதுப்பிக்கும் பயிற்சியில் ஈடுபட வேண்டும். புதிதாக பணிக்கு சேரும் இளைஞர்கள் 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களை புதுப்பிக்கும் பயிற்சித்திட்டத்தில் சேர்ந்து தங்களை அடுத்த கட்டத்துக்கு தயார்படுத்த வேண்டும்.
ஆதலால், கல்லூரியி்ல் பயிலும் இளைஞர்கள், மாணவர்கள் இந்த மிகப்பெரிய வாய்ப்பை பயன்படுத்துங்கள். குறுகிய காலத்தில் புதிய திறன்களை, திறமையை வளர்த்துக்கொள்ளப் பழகிக்கொள்ளுங்கள்.
எதிர்காலத்தில் இன்போசிஸ் நிறுவனத்துக்கு சிறந்த வளர்ச்சி இருக்ிறது. குறிப்பாக க்ளவுட் சேவையில் நல்ல வாய்ப்பு இருக்கிறது. திறமைவாய்ந்த இளைஞர்கள் இந்தத் துறையில் அதிகமாக சேர்க்கப்படுவார்கள்.
ஏராளமான நிறுவனங்களின், வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் பரிமாற்றப் பிரிவோடு அதிகமாகப் பணியாற்ற இருக்கிறோம். வாடிக்கையாளர்களுக்குத் தேவையான பப்ளிக் க்ளவுட், ப்ரேவேட் க்ளவுட் சேவையிலும் பணியாற்றி சேவைவழங்க இருக்கிறோம்
இவ்வாறு பரேக் தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.