மொபைல் ரீசார்ஜ் ஆப்ஸ் பாதுகாப்பானவையா? தேவையான முக்கிய அம்சங்கள் என்னென்ன?

By SG BalanFirst Published Oct 28, 2024, 3:56 PM IST
Highlights

மொபைல் ரீசார்ஜ் ஆப்ஸின் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வது அவசியம் ஆகும். Bajaj Pay போன்ற தளங்கள் எவ்வாறு வாடிக்கையாளர் பாதுகாப்பை உறுதி செய்கின்றன என்பதையும் இது விளக்குகிறது.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், மொபைல் ரீசார்ஜ் ஆப்ஸ் அன்றாட நிதி பரிவர்த்தனைகளை நிர்வகிப்பதற்கான இன்றியமையாத கருவியாக மாறிவிட்டன. உங்கள் மொபைல் பிளானை ரீசார்ஜ் செய்வது, பில்களைச் செலுத்துவது அல்லது உங்கள் FASTag கணக்கை டாப் அப் செய்வது என எதுவாக இருந்தாலும், மொபைல் ரீசார்ஜ் ஆப்ஸ் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால், ஆன்லைன் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பாதுகாப்பு கவலைகளும் அதிகரித்து வருகின்றன. இந்த ஆப்ஸ் எவ்வளவு பாதுகாப்பானவை, பயனர் பாதுகாப்புக்காக இவற்றில் உள்ள அம்சங்கள் என்னென்ன?

மொபைல் ரீசார்ஜ் ஆப்ஸின் பாதுகாப்பு அம்சங்களையும், பயனர்கள் தங்கள் நிதித் தேவைகளுக்காக இந்தத் தளங்களின் நம்பகத்தன்மையையும் இந்தக் கட்டுரை ஆராய்கிறது. பஜாஜ் பே போன்ற தளங்கள் எவ்வாறு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான அனுபவத்தை உறுதி செய்கின்றன என்பதையும் பார்ப்போம்.

Latest Videos

1. End-to-end encryption

மொபைல் ரீசார்ஜ் ஆப்ஸின் மிக முக்கியமான பாதுகாப்பு அம்சங்களில் ஒன்று எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் (End-to-end encryption) ஆகும். பயனரின் மொபைல் போனுக்கும் ஆப் சர்வருக்கும் இடையேயான அனைத்து தொடர்புகளும் என்கிரிப்ட் செய்யப்பட்டிருப்பதை இது உறுதி செய்கிறது. அதாவது கணக்கு விவரங்கள், கட்டணத் தரவு மற்றும் தனிப்பட்ட அடையாளங்கள் போன்ற முக்கியமான தகவல்களை வேறு யாரும் தெரிந்துகொள்ள முடியாது.

பரிவர்த்தனைகளுக்காக ஆப்பை பயன்படுத்தும்போது, ஒவ்வொரு பிட் டேட்டாவும் என்க்ரிப்ட் செய்யப்படும். இது சைபர் கிரிமினல்கள் நெட்வொர்க் டிராஃபிக்கை இடைமறித்தாலும், முக்கியமான தகவல்கள் அவர்களுகுக்க் கிடைக்காமல் தடுக்கிறது.
எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பயனர்களுக்கு அவர்களின் நிதி விவரங்கள் பாதுகாப்பாக இருக்கின்றன என்ற மன அமைதியை அளிக்கிறது, அவர்கள் பயன்பாட்டில் நுழைந்தது முதல் பரிவர்த்தனை முடியும் வரை.

2. Two-factor authentication (2FA)

Two-factor authentication (2FA) பயனர்கள் இரண்டு முறைகளைப் பயன்படுத்தி தங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கும் கூடுதல் பாதுகாப்பைச் வழங்குகிறது. ஒன்று, பாஸ்வேர்ட் அல்லது PIN), இன்னொன்று மொபைல் நம்பர் அல்லது ஈமெயிலுக்கு அனுப்பப்படும் OTP. இந்த அம்சம், ஒரு பயனரின் பாஸ்வேர்டை யாரேனும் வைத்திருந்தாலும், கணக்கில் அங்கீகரிக்கப்படாத நுழைவுகளுக்கான வாய்ப்பைக் கணிசமாகக் குறைக்கிறது.

PhonePe மற்றும் Bajaj Pay போன்ற செயலிகள், ரீசார்ஜ் ஆப்ஸ் 2FA அம்சத்தை பேமெண்ட் செயல்பாட்டில் எப்படி ஒருங்கிணைப்பது என்பதற்கான சில முக்கிய எடுத்துக்காட்டுகளாகும். இது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பாதுகாப்பு அளிப்பது மட்டுமின்றி, கூடுதல் சரிபார்ப்பும் தேவைப்படுகிறது. பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும் OTP ஐ பயன்படுத்த வேண்டியிருக்கும். இது ஹேக்கர்கள் மோசடியில் ஈடுபடுவதை மிகவும் கடினமாக்குகிறது.

2FA நிதி பரிவர்த்தனைகளைக் கையாளும் போது மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது அங்கீகரிக்கப்படாத அணுகலின் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் ஒட்டுமொத்த கணக்கு பாதுகாப்பை மேம்படுத்துகிறது.

3. Secure payment gateways

மொபைல் ரீசார்ஜ் செயலிகள் பரிவர்த்தனைகளைக் கையாள பாதுகாப்பான பேமெண்ட் கேட்வேகளை பயன்படுத்துகின்றன. இவை, கார்டு எண்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற முக்கியமான தரவு செயலியில் சேமிக்கப்படாமல், மூன்றாம் தரப்பு அமைப்பு மூலம் பாதுகாப்பாக செயலாக்கப்படுவதை உறுதி செய்கிறது. ஹேக்கர்களால் கட்டண விவரங்களைச் செயலியிலிருந்து நேரடியாக அணுக முடியாது என்பதும் அபாயத்தைக் குறைக்கிறது.

பேமெண்ட் கேட்வேயில் டோக்கனைசேஷனும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் முக்கியமான தரவு பரிமாற்றங்களுக்கு தனித்துவமான டோக்கன் பயன்படுத்தப்படுகிறது. இந்த டோக்கன் எந்த மதிப்பும் கொண்டிருக்காது. இதுவும் மோசடி அபாயத்தை மேலும் குறைக்கிறது.

4. Biometric authentication

பல நவீன ஸ்மார்ட்போன்கள் இப்போது கைரேகை ஸ்கேனிங் மற்றும் முக அங்கீகாரம் போன்ற பயோமெட்ரிக் அங்கீகார முறைகளை வழங்குகின்றன. ரீசார்ஜ் செயலிகள் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பை மேலும் மேம்படுத்துகின்றன. மறந்துபோகக்கூடிய பாஸ்வேர்டு அல்லது PINகளை நம்புவதற்குப் பதிலாக, பயோமெட்ரிக் அங்கீகாரம் பயனர்கள் செயலிக்குள் நுழைவதற்கும் பரிவர்த்தனைகளை அங்கீகரிக்கவும் பாதுகாப்பான மற்றும் வசதியான வழியாக உள்ளது
Google Pay, Bajaj Pay, PayTM போன்ற பிரபலமான ரீசார்ஜ் செயலிகளில் பெரும்பாலானவை உள்நுழைவு மற்றும் பரிவர்த்தனை ஒப்புதலுக்காக கைரேகை அல்லது முக அங்கீகாரத்தை பயன்படுத்த அனுமதிக்கின்றன. இது நம்பகமான மற்றும் வசதியான கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. பயோமெட்ரிக் தரவு ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்டதாக இருப்பதால், இந்த அம்சம் செயலியில் அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டின் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கிறது.

5. Real-time transaction alerts

மொபைல் ரீசார்ஜ் ஆப்ஸ் வழங்கும் முக்கியமான பாதுகாப்பு அம்சம் உடனுக்குடன் கிடைக்கும் பரிவர்த்தனை அறிவிப்புகள். இந்தத் அறிவிப்புகள், ஒவ்வொரு பரிவர்த்தனை முடிவடையும்போதும் பயனர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் கணக்கின் செயல்பாட்டைக் கூர்மையாகக் கண்காணிக்க உதவுகின்றன. ஏதேனும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை செய்யப்பட்டால், பயனர்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகாரளிப்பது அல்லது கணக்கைத் பிளாக் செய்வது போன்ற உடனடி நடவடிக்கைகளை எடுக்கலாம்.

மொபைல் ரீசார்ஜ் செயலிகளில் வெற்றிகரமான ரீசார்ஜ், பில் பேமெண்ட், அக்கவுண்ட் அப்டேட் உள்பட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் உடனுக்குடன் அறிவிப்புகள் கிடைக்கும். எந்தவொரு சந்தேகத்திற்கிடமான செயலையும் உடனடியாகக் கண்டறிய முடியும் என்பதை இந்த அம்சம் உறுதிசெய்கிறது, இதனால் பயனர்கள் ஏதேனும் சேதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க முடியும்.

6. Auto-logout and session management

மொபைல் ரீசார்ஜ் செயலிகளில் உள்ள மற்றொரு பயனுள்ள பாதுகாப்பு அம்சம் தானாக வெளியேறுவது. இது ஒரு குறிப்பிட்ட நேரம் பயன்படுத்தாமல் இருந்தால் தானாகவே வெளியேறிவிடும். ஒரு பயனர் தனது கணக்கிலிருந்து வெளியேற மறந்தால் அல்லது தனது மொபைலை கவனிக்காமல் விட்டுவிட்டால், இந்த அம்சம் செயலியில் அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டைத் தடுக்கிறது.
மேலும், இது பயனர்கள் செயலியை பயன்படுத்தும் நேரத்தைப் பாதுகாப்பாக நிர்வகிக்கிறது. ஒரு நேரத்தில் ஒரு மொபைலில் மட்டும் பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்கிறது. வேறொரு மொபைலில் இருந்து மற்றொருவர் உள்நுழைவதைக் கண்டறிந்தால், உடனடியாகப் பயனருக்குத் தகவல் தெரிவித்து, அங்கீகரிக்கப்படாத நுழைவைத் தடுக்க, ஏற்கெனவே செயலில் உள்ள அமர்விலிருந்து வெளியேறுகிறது.

7. Fraud detection and AI-powered security

பல மொபைல் ரீசார்ஜ் செயலிகள் இப்போது செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் (ML) போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மோசடியைக் கண்டறிந்து தடுக்கின்றன. இந்த அமைப்புகள் பயனர் நடத்தை மற்றும் பரிவர்த்தனை முறைகளை உடனுக்குடன் கண்காணித்து, சந்தேகத்திற்குரிய செயல்பாடு பற்றி எச்சரிக்கின்றன.
எடுத்துக்காட்டாக, ஒரு பயனர் திடீரென குறுகிய காலத்தில் பல உயர் மதிப்புப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் அல்லது வழக்கத்திற்கு மாறான இடங்களிலிருந்து கணக்கை அணுக முயற்சித்தால், AI பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை செய்தி அனுப்பும். அல்லது கணக்கைத் தற்காலிகமாகத் பிளாக் செய்துவிடும்.

Bajaj Pay போன்ற செயலிகள் உடனுக்குடன் அபாயங்களைக் கண்டறிய, மோசடியைக் கண்டறியும் அமைப்புகளைப் பயன்படுத்துகின்றன. பாதுகாப்பிற்கான இந்த அணுகுமுறை, மோசடி பரிவர்த்தனைகள் முன்கூட்டியே கண்டறியப்படுவதையும், பயனர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்கிறது.

8. Data privacy and compliance

ஆன்லைனில் மொபைல் ரீசார்ஜ் செய்யும்போது மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று பயனர் தரவைப் பாதுகாப்பு ஆகும். தனிப்பட்ட தரவு பொறுப்புடனும் பாதுகாப்பாகவும் கையாளப்படுவதை உறுதிசெய்ய, செயலிகள் இந்தியாவின் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு மசோதா (PDPB) அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை (GDPR) போன்ற கடுமையான தரவு தனியுரிமை விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும்.

பல புகழ்பெற்ற தளங்கள், பயனர் தகவல் எவ்வாறு சேகரிக்கப்படுகிறது, சேமிக்கப்படுகிறது மற்றும் பயன்படுத்தப்படுகிறது என்பதை நிர்வகிக்கும் தரவு பாதுகாப்பு கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலம் இந்த விதிமுறைகளை கடைபிடிக்கின்றன. தரவு தனியுரிமைக்கான இந்த அர்ப்பணிப்பு பயனர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதில்லை அல்லது ஒப்புதல் இல்லாமல் பிறருடன் பகிரப்படுவதில்லை என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

9. Customer support for security issues

இந்த அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் இருந்தாலும்கூட, பயனர்கள் தோல்வியுற்ற பரிவர்த்தனைகள் அல்லது சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள் போன்ற சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், உதவக்கூடிய வாடிக்கையாளர் ஆதரவுக் குழுவைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியமானது. நன்கு வடிவமைக்கப்பட்ட மொபைல் ரீசார்ஜ் ஆப்ஸ் வாடிக்கையாளர் சேவையை அணுகும் வசதியை எளிமையாக வழங்குகின்றன. இதன் மூலம் பயனர்கள் விரைவாக தங்கள் சிக்கல்களைத் தீர்க்கலாம் அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்பாடு குறித்துப் புகாரளிக்கலாம்.

PhonePe அல்லது Bajaj Pay போன்ற பயன்பாடுகள் உடனடி வாடிக்கையாளர் சேவையை வழங்குகின்றன. பயனர்களுக்குத் தேவைப்படும்போது உதவியைப் பெற முடியும் என்பதை உறுதிசெய்கின்றன. தோல்வியுற்ற ரீசார்ஜை சரிசெய்வது அல்லது பாதுகாப்பு மீறல் பற்றி புகார் அளிப்பது போன்ற சிக்கல்கள் உடனடியாகத் தீர்க்கப்படும் என்பதில் பயனர்கள் உறுதியாக இருக்கலாம்.

10. Regular security updates

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்ந்து அதிகமாகி வருகின்றன. மேலும் மொபைல் ரீசார்ஜ் பயன்பாடுகள் தங்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். டெவலப்பர்கள் வழக்கமாக ஆப்ஸ் புதுப்பிப்புகளை வெளியிடுவதால், பாதிப்புகளை சரிசெய்யவும், குறியாக்க முறைகளை மேம்படுத்தவும், புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தவும்.

அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய, புகழ்பெற்ற தளங்கள் தங்கள் செயலிகளைத் தொடர்ந்து புதுப்பிக்கின்றன. சமீபத்திய பாதுகாப்பு மேம்பாடுகளுக்காக பயனர்கள் செயலியை அப்டேட் செய்துகொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

முடிவுரை

மொபைல் ரீசார்ஜ் செயலிகள் தினசரி நிதிப் பரிவர்த்தனைகளை நிர்வகிப்பதற்கு இன்றியமையாததாகிவிட்டன. ஆனால் பரவலான பயன்பாட்டுக்கு ஏற்ப வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் (end-to-end encryption), பயோமெட்ரிக் அங்கீகாரம் (biometric authentication), மோசடி கண்டறிதல், உடனுக்குடன் கிடைக்கும் பரிவர்த்தனை அறிவிப்புகள் எனப் பல அடுக்குப் பாதுகாப்பு மூலம் இந்த செயலிகள் பயனர்களின் தரவு மற்றும் நிதி பாதுகாப்பை உறுதிசெய்கின்றன.

Bajaj Pay போன்ற தளங்கள் பயனர் பாதுகாப்பை தீவிரமாக எடுத்துக்கொண்டு, அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய, கடுமையான தரவு தனியுரிமை தரநிலைகளை கடைபிடிக்கின்றன. ரீசார்ஜ்கள், பில் பேமெண்ட் உள்ளிட்ட பலவற்றை நிர்வகிக்க பாதுகாப்பான மற்றும் வசதியான வழியை வழங்குவதன் மூலம் மொபைல் ரீசார்ஜ் செயலிகள் டிஜிட்டல் யுகத்தில் நம்பகத்தன்மையை தொடர்ந்து உருவாக்குகின்றன.

பயனர்கள் இந்தப் பாதுகாப்பு அம்சங்களைப் புரிந்துகொண்டு பயன்படுத்துவதன் மூலம் மொபைல் ரீசார்ஜ் செயலிகளின் பயனைப் பெறும் அதே வேளையில் தங்கள் நிதி சார்ந்த தகவலையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

click me!