தங்கம் விலை கிடு கிடு உயர்வு..! சவரன் 29 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் பீதி..!

Published : Aug 07, 2019, 11:59 AM IST
தங்கம் விலை கிடு கிடு உயர்வு..! சவரன் 29 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் பீதி..!

சுருக்கம்

22 கேரட் ஆபரண தங்கம் : கிராம் ரூ. 3544.00 (71 ரூபாய் அதிகரிப்பு). சவரனுக்கு 568 ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 352 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.   

தங்கத்தின் விலை தொடர் ஏறுமுகத்தில் இருந்து வரும் இந்த தருணத்தில் ஒரு சவரன் தங்க விலை 29 ஆயிரத்தை நெருங்க உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். 

இன்று, காலை நேர நிலவரப்படி,  

22 கேரட் ஆபரண தங்கம் : கிராம் ரூ. 3544.00 (71 ரூபாய் அதிகரிப்பு). சவரனுக்கு 568ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 352 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலையில் இது உச்சம் அடைந்து உள்ளது 

இதே போன்று வெள்ளி விலையும் அதிகரித்து உள்ளது. அதன் படி, கிராமுக்கு 46.80 (1.10 ரூபாய் அதிகரிப்பு)

ஏற்கனவே தங்கம் விலை தொடர் ஏறுமுகத்தில் இருந்து வந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில், சவரன் விலை மிக விரைவில் 29 ஆயிரத்தையும் நெருங்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இன்றைய  நிலையில், ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால்,குறைந்தபட்சம் செய்கூலி சேதாரம் என சேர்த்து, 33 ஆயிரம் ரூபாய் ஆகும் என்பது கூடுதல் தகவல்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Gold Rate Today (December 20): தங்கம் வாங்க போறீங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க.!
Business Loan: வேலை போனாலும் வாழ்க்கை போகாது.! 50 லட்சம் கடன்.! 35% மானியம்.! அரசு தரும் சுயதொழில் தீர்வு.!