
தங்கம் விலை உயர்வு......!! சவரன் 22 ஆயிரத்தை தொடுகிறது....!!!
கடந்த 4 நாட்களாகவே , தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வு கண்டு வருகிறது.இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகை நெருங்குவதால், தங்கம் வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர் .
இதனால் தங்கத்தின் விலையில் இன்னும் சில நாட்களுக்கு அதிகமாகத்தான் இருக்கும் என தெரிகிறது. இதனை தொடர்ந்து தற்போது சவரன் ரூபாய் 22 ஆயிரத்தை தொடும் என எதிர்பாக்கப்படுகிறது. இதனால்,. மேலும் சில நாட்களுக்கு தங்கத்தின் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சவரன் விலை 22 ஆயிரத்தை நெருங்கும் தருவாயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி , இன்றைய காலை நேர நிலவரப்படி,
தங்கம் விலை நிலவரம் :
22 கேரட் தங்கம் , 2 ஆயிரத்து 735 ரூபாயாகவும், 21 ஆயிரத்து 880 ரூபாயாகவும், அதே சமயத்தில், 24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம் 28 ஆயிரத்து 610 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம் :
ஒரு கிராம் வெள்ளி 43 ரூபாய் 50 பைசாவாகவும்
ஒரு கிலோ பார் வெள்ளி 40 ஆயிரத்து 670 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.