
தங்கம் விலை நாளுக்கு நாள் அதிரடியாக உயர்ந்து வருகிறது. ராக்கெட் வேகத்தில் செல்லும் தங்கம் சவரன் ரூ.41 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 50 ரூபாயும், சவரனுக்கு 400 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.5,065ஆகவும், சவரன், ரூ.40,520ஆகவும் இருந்தது.
தங்கம் விலை கொஞ்சூண்டு குறைவு! நடுத்தரக் குடும்பத்தினருக்கு ஆறுதல்! நிலவரம் என்ன?
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(புதன்கிழமை) கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து ரூ.5,115ஆகவும், சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ரூ.40 ஆயிரத்து 920ஆக ஏற்றம் கண்டது
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,115க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை கடந்த 2 நாட்களாக விலை அதிகரித்த நிலையில் நேற்று சற்றுக் குறைந்திருந்தது. ஆனால், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது.
தங்கப் பத்திரம் சிறந்ததா, கோல்ட் இடிஎப் லாபமானதா? முதலீட்டுக்கு எது சரியான தேர்வு?
தங்கம் நகை விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, நகைப்பிரியர்களுக்கும், நடுத்தரக் குடும்பத்தினர், நகைவாங்க நினைப்போருக்கும் பெரும் வருதத்ததை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலையில் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 2 ரூபாய் 20 பைசா அதிகரித்து, ரூ.74.70 ஆகவும், கிலோவுக்கு ரூ.2,200 உயர்ந்து, ரூ.74,700 ஆக ஏற்றம் கண்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.