
ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரணுக்கு ரூ.400 அதிகரித்து நிலையில் இன்று திடீரென ரூ.280 குறைந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராம் ரூ.4,810க்கும், சவரண் ரூ.38,480க்கு விற்பனையானது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.4,775 ஆகவும், சவரணுக்கு, ரூ.280 குறைந்து, ரூ.38,200க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை கடந்த 10 நாட்களில் சராசரியாக சவரணுக்கு ரூ.200 முதல் ரூ.400 வரை ஏற்ற இறக்கத்தில்தான் இருந்து வருகிறது. பெரிதாக மாற்றம் ஏதும் இல்லை. ஆதலால், எப்போதுவேண்டுமானாலும் ரொக்கமாக மாற்றக்கூடிய வகையில் தங்கமாக வாங்கி வைப்பது சிறந்த முதலீடாகும். பெரிதாக விலை மாற்றத்தைச் சந்திக்காத நிலையில் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.
கடந்த 10 நாட்களுக்குப்பின் தங்கம் விலை சவரண் நேற்று ரூ.400 உயர்ந்து, இது 10 நாட்களில் இல்லாத அளவு உயர்வைப் பெற்றது. ஆனால் இன்று ரூ.280 சவரணுக்கு குறைந்துள்ளது.
கடந்த மே 26-ம் தேதியிலிருந்து ஜூன் 2ம் தேதிவரை 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4,465 முதல் ரூ.4,475க்குள் ஊசலாடிக்கொண்டே வந்தது. திடீரென நேற்று சவரணுக்கு ரூ.400 அதிகரித்தது. ஆனால், இன்று ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.35 குறைந்துள்ளது, சவரணுக்கு, ரூ.280 குறைந்துள்ளது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் சரி்ந்துள்ளது. இதன்படி, வெள்ளி கிராம் ரூ.67.50 க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.67,500க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 குறைந்துள்ளது.
கடந்த மே 25ம் தேதி முதல் ஜூன்2ம் தேதிவரை வெள்ளி விலையில் எந்த மாற்றமும் பெரிதாக இல்லை. இந்நிலையில் நேற்று ரூ.1500 விலை உயர்ந்தநிலையில் இன்று ரூ.1000 குறைந்துள்ளது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.