
epfo interet rate :மாத ஊதியம் பெறுவோருக்கு அதிகமான பலன் அளிக்கும் இபிஎப்ஓ மீதான வட்டி வீதம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைக்கப்பட்டு 8.1 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது, நடப்பு நிதியாண்டுக்கான அந்த வட்டிவீதத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
40 ஆண்டுகளில்
ஏறக்குறைய 5 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் இருக்கும் இந்தத் திட்டத்துக்கு இந்தநிதியாண்டு வழங்கப்படும் வட்டி கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவாகும்.
பணியாளர் வருங்கால வைப்பு நிதியின் அறங்காவலர்கள் கூட்டம் கடந்த மார்ச் மாதம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் (2022-23)நடப்பு நிதியாண்டுக்கான வட்டிவீதத்தை 8.5 சவீதத்திலிருந்து 8.1 சதவீதமாகக் குறைக்க பரிந்துரைக்கப்பட்டது. வட்டிவீதத்தை குறைத்ததற்கு தொழிலாளர்கள், எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டாலும், பணவீக்கத்தை அடிப்படையாக வைத்து வட்டிக் குறைப்பு செய்யப்பட்டது.
கடைசியாக
கடைசியாக கடந்த 1977-78ம் ஆண்டு பிஎப்க்கு 8 சதவீதம் வட்டி வழங்கப்பட்டதுதான் மிகக்குறைந்தபட்சமாகும். அதன்பின் 42 ஆண்டுகளிலேயே மிகக்குறைவான வட்டி இப்போதுதான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-19ம் ஆண்டு 8.65% வழங்கப்பட்டது, 2019-20ம் ஆண்டு 8.50%சதவீதமாக வட்டிக் குறைக்கப்பட்டது. 2017-18ம் ஆண்டு 8.55 சதவீதமாக 2016-17ம் ஆண்டு பிஎப் வட்டி8.65%, இருந்தது. அதிகபட்சமாக 2015-16ம் ஆண்டு பிஎப் வட்டி 8.80 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.
2013-14, 2014-15ம் ஆண்டு 8.75%, 2012-2013ம் ஆண்டு 8.50 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. 2011-12ம் ஆண்டு 8.25%வட்டி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒப்புதல்
ஆனால் இந்த வட்டிக்குறைப்பு பரிந்துரைக்கு இதுவரை மத்திய அரசு ஒப்புதல் பெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், “ நடப்பு நிதியாண்டுக்கான பிஎப் வட்டி 8.1 சதவீதமாக நிர்ணயிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி நடப்பு நிதியாண்டுக்கான வட்டி உறுப்பினர்கள் கணக்கில் சேர்க்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.