
தங்கம் விலை தொடர்ந்து 3-வது நாளாக இன்று அதிகரித்துள்ளது. சவரன் முதல்முறையாக ரூ.41ஆயிரத்தை நடுத்தரக் குடும்பத்தினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாயும், சவரனுக்கு 120 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.5,115ஆகவும், சவரன், ரூ.40,920ஆகவும் இருந்தது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(சனிக்கிழமை) கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து ரூ.5,130ஆகவும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ரூ.41 ஆயிரத்து 040 ஆக ஏற்றம் கண்டுள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,130க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை குறைவுதான் ஆனால்..! நிம்மதியிழந்த மிடில்கிளாஸ் மக்கள்: (29/12/2022)நிலவரம் என்ன
தங்கம் விலை தொடர்ந்து 3 நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. பண்டிகைக்காலம் வருவதையடுத்து, நகைப்பிரியர்கள், தங்கம் வாங்குவோர் தேவையால், தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் தங்கம் விலை சவரன் ரூ.41 ஆயிரத்தை எட்டியுள்ளது. தங்கம் இது மிடில்கிளாக் மக்களுக்கும், நகை வாங்க நினைப்போருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரம் முழுவதுமே தங்கம் விலை ஏற்றத்துடனே இருந்துள்ளது.
இந்த வாரத் தொடக்கத்தில் தங்கம் கிராம் 5,086 ஆகத் தொடங்கியதும், வாரத்தின் கடைசி நாளான இன்று கிராம் ரூ.5,130 என்ற விலையில் அதாவது கிராமுக்கு 34 ரூபாய் உயர்ந்துள்ளது, சவரனுக்கு ரூ.272அதிகரித்துள்ளது.
இல்லத்தரசிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்.! தாறுமாறாக எகிறிய தங்கம்.. எவ்வளவு தெரியுமா?
வெள்ளி விலையில் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 20 பைசா குறைந்து, ரூ.74.30ஆக சரிந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.200 சரிந்து, ரூ.74,300 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.