தங்கம் விலை வாரத்தின் முதல்நாளான இன்று அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது நடுத்தர குடும்பத்து மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
தங்கம் விலை வாரத்தின் முதல்நாளான இன்று அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது நடுத்தர குடும்பத்து மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
தங்கம் விலை இன்று கிராமுக்கு 3 ரூபாயும், சவரனுக்கு 24 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,320ஆகவும், சவரன், ரூ.42,560ஆகவும் இருந்தது.
கொஞ்சூண்டு குறைந்த தங்கம் விலை! இதெல்லாம் ஆறுதல் தருமா? இன்றைய நிலவரம் என்ன
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(திங்கள்கிழமை) கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ரூ.5,323ஆகவும், சவரனுக்கு 24 ரூபாய் அதிகரித்து ரூ.42 ஆயிரத்து 584 ஆக அதிகரித்துள்ளது
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,584க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்து சவரன் ரூ.42 ஆயிரத்துக்கு மேல் உயர்ந்துவிட்டது. இந்த நிலையில் இருந்து தங்கம் விலை குறையாமல் இருந்துவருகிறது. அவ்வப்போதுகுறைந்தாலும், அது விலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவ்வாறு குறைந்தாலும், மொத்தமாக சேர்த்து, என்றாவது ஒருநாள் விலை உயர்ந்துவிடுகிறது
இதனால், தங்கம் வாங்க நினைக்கும் நடுத்தரக் குடும்பத்தினர், நகைப்பிரியர்கள் விலை உயர்வை நினைத்து கலங்கியுள்ளனர். தங்கத்தின் விலை மீண்டும் சவரன் ரூ.42,600 நோக்கி நகர்ந்து வருவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
வெச்சு செய்யும் தங்கம் விலை! மிடில் கிளாஸுக்கு ஷாக்: இன்றைய நிலவரம் என்ன
வெள்ளி விலையில் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று ரூ.74.30ஆக இருந்தநிலையில் 40 பைசா உயர்ந்து ரூ.74.70ஆகவும், கிலோவுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.74 ஆயிரத்து 700ஆகவும் அதிகரித்துள்ளது.