ரூ.86 உயர்ந்தது சிலிண்டர் விலை - "சமையல் பண்ணவா? வேண்டாமா?..." குமுறும் பெண்கள்

Asianet News Tamil  
Published : Mar 01, 2017, 01:09 PM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
ரூ.86 உயர்ந்தது சிலிண்டர் விலை - "சமையல் பண்ணவா? வேண்டாமா?..." குமுறும் பெண்கள்

சுருக்கம்

In the international market price of crude oil petrol diesel and LPG prices to be tweaked from time to time

மானியம் இல்லாத எரிவாயு சிலிண்டரின் விலை 86 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதற்கு பெண்கள், பொது மக்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர்களின் விலை அவ்வப்போது மாற்றி அமைக்கப்படும். பெட்ரோல் மற்றும் டீசல் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை உயர்த்தப்பட்டு வருகிறது,

அதே போன்று எரிவாயு சிலிண்டர்களின் விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் மானியம் இல்லாத சிலிண்டருக்கு 5 ரூபாயை பெட்ரோலியத் துறை உயர்த்தியது.

தற்போது மானியம் இல்லாத சிலிண்டரின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது சிலிண்டர் ஒன்றுக்கு 86 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு சிலிண்டரின் விலை737 ரூபாய் என்று இருந்த நிலையில் தற்போது 86 ரூபாய் உயர்த்தப்பட்டு 823 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று பெட்ரோலியத் துறை  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த விலை உயர்வு உடனடியாக அமல்படுத்தப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மானியத்துடன் வழங்கப்படும் சிலிண்டரின் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என அறிவிக்கப்படுள்ளது.

இந்த சிலிண்டர் விலை உயர்வு பொது மக்கள் மற்றும் பெண்களிடையே கடும் கோபத்தை  ஏற்படுத்தியுள்ளது,

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Raksha Bandhan 2026: ரக்‌ஷா பந்தன் நாளில் சந்திர கிரகணம்.. ராக்கி கட்டலாமா? கூடாதா? முழு விபரம்
ITR Refund 2026: மொபைல், பார்ட்டினு வீணாக்காதீங்க! ரீஃபண்ட் பணத்தை வைச்சு லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்!