Fact Check: ரூ.21,000 முதலீடு, மாதம் ரூ.15 லட்சம் வருமானமா? வைரல் வீடியோ பின்னணி!

Published : Jun 14, 2025, 08:41 AM IST
Modi Fake Video PIB Fact Check

சுருக்கம்

பிரதமர் மோடி, நாராயண மூர்த்தி பெயரில் ரூ.21,000 முதலீடு செய்தால் மாதம் ரூ.15 லட்சம் வருமானம் கிடைக்கும் எனக் கூறும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. PIB இந்த வீடியோ போலியானது என உறுதி செய்துள்ளது.

பிரதமர் மோடி நாட்டு மக்கள் மாதம் ரூ.15 லட்சம் சம்பாதிக்க, ரூ.21,000 முதலீடு செய்ய வலியுறுத்துவது போன்ற வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவின் உண்மைத்தன்மை என்ன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

“கற்பனை செய்து பாருங்கள், ஒவ்வொரு மாதமும் ரூ.15 லட்சம் சம்பாதிப்பது. இந்தியாவில் ரூ.21,000 முதலீடு செய்து கணக்கு திறக்கும் எவரும் மாத இறுதியில் இந்தக் கனவு நனவாகும். திரு. நாராயண மூர்த்தியால் இது சாத்தியமாகியுள்ளது. பயனர்களின் நிதியை தானாகவே அதிகரிக்கும் ஒரு அமைப்பை அவர் உருவாக்கியுள்ளார்…” இந்தச் செய்தி சமூக ஊடகங்கள் அல்லது வாட்ஸ்அப் மூலம் உங்களை அடைந்திருக்கலாம். வீடியோவில் பிரதமர் நரேந்திர மோடி பேசுவதைக் காணலாம்.

ஆனால், ரூ.21,000 முதலீடு செய்து மாதம் ரூ.15 லட்சம் சம்பாதிக்கும் திட்டம் உண்மையாகவே இருக்கிறதா? இந்த வைரல் வீடியோவின் பின்னணி என்ன என்பதைப் பார்க்கலாம்.

 

 

மாதத்திற்கு ரூ.15 லட்சம் கிடைக்குமா?

1.03 நிமிடங்கள் கொண்ட இந்த வைரல் வீடியோவில், முன்னாள் இன்ஃபோசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி என்.ஆர். நாராயண மூர்த்தியின் படம் இடம்பெறுகிறது. “ஒரு தானியங்கி அமைப்பைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நாங்கள் அதை 2 ஆண்டுகளாக உருவாக்கி வருகிறோம். இது இந்தியாவில் பலருக்கு கூடுதல் வருமானத்தைத் தரக்கூடியது” என்று நாராயணமூர்த்தி கூறுவது போல ஒரு குரல் பதிவும் கேட்கிறது.

பிறகு, இன்றைய காலகட்டத்தில், ஒரு மாதத்தில் 15 லட்சம் ரூபாய் சம்பாதிப்பது என்பது ஒரு சகஜமாகிவிட்டது என்று கூறப்படுகிறது.

இறுதியில், “நீங்கள் இந்த மாதத்திற்குள் ரூ.21,000 டெபாசிட் செய்தால் போதும், உங்கள் நிதி ஒவ்வொரு நாளும் பெருகுவதைக் காண்பீர்கள்” என்று பிரதமர் மோடியின் குரல் இடம்பெறுகிறது. இந்த வீடியோவில் உள்ள பிரதமரின் குரலாக இருந்தாலும் சரி, நாராயண மூர்த்தியின் குரலாக இருந்தாலும் சரி, பார்த்தவுடன் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்காது. ஆனால் நீங்கள் பார்ப்பதோ கேட்பதோ உண்மையல்ல.

உண்மை என்ன?

அதிகமாகப் பரப்பப்படும் இந்த வீடியோ போலியானது. சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த வீடியோ பற்றிய தகவல்களை PIB உண்மைச் சரிபார்ப்புக் குழு அளித்துள்ளது. இதுபோன்ற போலி கூற்றுக்கள் அல்லது மோசடிகளுக்கு இரையாகாதீர்கள் என்றும் கூறியுள்ளது.

போலி வீடியோக்கள், முதலீடு தொடர்பான கவர்ச்சிகரமான சலுகைகள் பற்றிக் கூறும் தளத்திலிருந்து விலகி இருங்கள். சமீப காலங்களில், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இதுபோன்ற போலியான ஆடியோ-வீடியோ பதிவுகள் அதிகமாகப் பரவத் தொடங்கியுள்ளன. இவற்றின் மூலம் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற சூழ்நிலையில், அனைவரும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். உங்கள் கண்களால் நீங்கள் பார்ப்பதையோ அல்லது கேட்பதையோ உடனடியாக நம்பாதீர்கள் என்று PIB இன் பதிவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு