31 ஆண்டுகளுக்கு பிறகு கடும் வீழ்ச்சியை சந்தித்த பிரிட்டிஷ் பவுண்ட்.....

Asianet News Tamil  
Published : Oct 09, 2016, 03:13 AM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
31 ஆண்டுகளுக்கு  பிறகு கடும் வீழ்ச்சியை சந்தித்த பிரிட்டிஷ் பவுண்ட்.....

சுருக்கம்

நேற்றைய  வர்த்தகத்தில்,  ஆசிய பங்குச் சந்தையில் பிரிட்டிஷ் நாணயமான பவுண்ட்டின் மதிப்பு மிகக் கடுமையாக சரிவடைந்தது.

அதாவது,  நேற்றைய வர்த்தகத்தில் 6 சதவீதம் வரை பவுண்ட் மதிப்பு  குறைந்தது குறிப்பிடத்தக்கது.

ஆசிய பங்குச் சந்தையில், நேற்று, ஒரு பவுண்டுக்கு நிகரான டாலர் மதிப்பு 1.1819 ஆக சரிந்தது.

இதற்கு முன்னதாக, 1985-ம் ஆண்டில் ஏற்பட்ட சரிவுக்கு பிறகு தற்போது  தான் மிகப் பெரிய சரிவை கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகத் தயாராவதால், அதனோடு உள்ள பேச்சுவார்த்தைகளில் கண்டிப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்த் தெரிவித்ததே , இந்த  சரிவிற்கு  காரணம்  என  தெரிகிறது.

அதே சமயத்தில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகப் போவதாக அறிவித்ததிலிருந்தே பவுண்ட் மதிப்பு சரிவது  குறிப்பிடத்தக்கது.

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

சீனியர் சிட்டிசன்களுக்கு செம சான்ஸ்! PNB வங்கியின் புதிய வட்டி விகிதம்: எவ்வளவு லாபம் கிடைக்கும்?
மூத்த குடிமக்களுக்கு குட்நியூஸ்.. ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு.. இனி நிம்மதியாக உறங்கலாம்!