ஒவ்வொரு மாதமும் ரூ.42 முதலீடு செய்யுங்க.. வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும்.. சூப்பர் திட்டம்.!

Published : Mar 19, 2024, 11:23 AM IST
ஒவ்வொரு மாதமும் ரூ.42 முதலீடு செய்யுங்க.. வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும்.. சூப்பர் திட்டம்.!

சுருக்கம்

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ. 42 முதலீடு செய்து வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெற முடியும். இந்த திட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

அனைத்துப் பிரிவினருக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டங்கள் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் முதியோர்களுக்கானது. இன்று முதல் பணத்தை டெபாசிட் செய்ய ஆரம்பித்தால், உயிருடன் இருக்கும் வரை 60 வயது முதல் ஓய்வூதியம் பெறலாம் என்ற திட்டம் ஒன்று மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ரூ.1 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை இந்த ஓய்வூதியம் கிடைக்கும்.

இதற்கு நீங்கள் 42 ரூபாய் மட்டுமே செலவழிக்க வேண்டும் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்தத் திட்டத்தின் பெயர் அடல் பென்ஷன் யோஜனா (APY). இது அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களை மையமாகக் கொண்ட இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஓய்வூதியத் திட்டமாகும். இந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 60 வயதில் மாதம் ரூ.1000, 2000, 3000, 4000 அல்லது 5000 ரூபாய் ஓய்வூதியம் பெறலாம்.

ஒவ்வொரு மாதமும் நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப ஓய்வூதியம் கிடைக்கும். இந்திய குடிமகன் எவரும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நபரின் வயது 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பதாரர் வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

பதிவு செய்யும் போது ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்ணைக் கொடுத்த பிறகு, உங்கள் கணக்கு பற்றிய அனைத்து தகவல்களையும் பெறுவீர்கள். இப்போது 18 வயது முதல் ஒவ்வொரு மாதமும் வெறும் 42 ரூபாய் டெபாசிட் செய்தால், 1000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். அதேசமயம், 84 ரூபாய் முதலீடு செய்தால், ஓய்வூதியமாக 2,000 ரூபாய் கிடைக்கும். அதேபோல், ரூ.210 செலுத்தினால், மாதம்தோறும் ரூ.5 ஆயிரம் வரை ஓய்வூதியம் வழங்கப்படும்.

இருப்பினும், ஒவ்வொரு மாதமும் டெபாசிட் செய்ய வேண்டிய தொகை உங்கள் வயதைப் பொறுத்தது. 40 வயதில் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பித்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியமாக ரூ.1454 செலுத்த வேண்டும். இப்போது, யாராவது 30 வயதிலிருந்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து, சில காரணங்களால் அவர் 60 வயதிற்குள் இறந்துவிட்டால், கணவன் அல்லது மனைவிக்கு அதே ஓய்வூதியம் கிடைக்கும். இருவரும் இறந்தால், முழுத் தொகையும் நாமினிக்கு வழங்கப்படும்.

சீக்கிரமா ஆபிஸ் போக இருபாலருக்கும் ஏற்ற டூ வீலர் .. பெட்ரோல் அதிகம் குடிக்காத 5 மலிவு விலை ஸ்கூட்டர்கள்..

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

EMI Calculator: ரூ.30,000 தான் சம்பளம் வாங்குறீங்களா? வீடு, கார் லோன் வாங்குனா எப்படி மேனேஜ் பண்ணலாம்? இதோ சிம்பிள் கணக்கு.!
Amazon Offer : அமேசானின் அதிரடி ஆஃபர்! குறைந்த விலையில் எந்த ஃபோன் வாங்கலாம்?