foxconn india: iphone 14 india manufacturing: சென்னையில் ஐ-போன்14 தயாரிப்பைத் தொடங்கியது ஆப்பிள் நிறுவனம்

By Pothy RajFirst Published Sep 26, 2022, 2:02 PM IST
Highlights

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் ஐபோன்-14 தயாரிப்பை ஆப்பிள் நிறுவனம் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் ஐபோன்-14 தயாரிப்பை ஆப்பிள் நிறுவனம் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 16ம் தேதி உலகளவில் ஐபோன்-14 அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் அதன் அசெம்பிள் அனைத்தும் சென்னை ஆலையில் முடிக்கப்பட்டு, உள்நாட்டுக்கும், வெளிநாட்டுக்கும் சப்ளை செய்யப்படுகிறது.

மயங்கி விழாதிங்க!திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் சொத்து மதிப்பு என்ன? வெளியானது உண்மை தகவல்


சீனாவில் ஐபோன்-14 தயாரிக்கப்பட்டிருந்தால் இறக்குமதியாகும்போது அதற்கான இறக்குமதி,சுங்கவரி செலுத்த வேண்டும். இதனால் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் பணம் செலுத்த வேண்டியதிருக்கும். 
ஆனால், இந்தியாவிலேயே ஐபோன்-14 தயாரிக்கப்பட்டு, அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனைக்கு வருவதால், உள்நாட்டில் ஐபோன்-14 விலை குறையும்.


ஆனால், ஐபோன்-14 விலைக் குறைப்பு உடனடியாக இருக்காது என்றும், அதற்கு சில காலாண்டுகள் வரை ஆகும் என்று ஆப்பிள் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தங்கத்தின் விலையில் இப்படிஒரு மாற்றமா! இவ்வளவுதான் உயர்வா! இன்றைய நிலவரம் என்ன?
ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் “ இந்தியாவில் ஐபோன்-14 உற்பத்தியை தொடங்க இருக்கிறோம். புதிய மாடல் ஐபோன் புதிய தொழில்நுட்பங்களையும், அதிகமான பாதுகாப்பு அம்சங்களையும் தாங்கிஇருக்கும்” எனத் தெரிவித்துள்ளது.


இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு ஆப்பிள் நிறுவனம் 26 சதவீதம் வரி செலுத்தும், ஆனால், தற்போது 4 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்தினால் போதுமானது. 


ஏனென்றால், 18சதவீதத்தை மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு செலுத்திவிட்டது. வரிக் குறைப்பு மூலம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு வரும் மாதங்களில் குறைந்த விலையில் ஐபோன்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு.

ஆப்பிள் ஐபோனுக்கு வரலாறு காணாத தள்ளுபடி?
ஐபோன்-14 விலை எவ்வளவு குறையும் என்று தெரிவிக்க ஆப்பிள் செய்தித்தொடர்பாளர் மறுத்துவிட்டார். ஆனால் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்துப்படி ஐபோன்-14 விலை சர்வதேச விலையில் இருந்து 17 முதல் 20 சதவீதம் வரை இந்தியாவில் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.


இந்தியாவில் இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் இரு மாடல் போன்கள் தயாரிக்கப்பட்டு, அசெம்பிள் செய்யப்பட்டுள்ளன. 


ஐபோன்-14க்கு முன்பாக ஐபோன்-13 மொபைல்போன் ஏப்ரல் 13ம்தேதி அசெம்பிள் செய்யும் பணி தொடங்கியது. 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐபோன்-13 அறிமுகம் செய்யப்பட்டு, அதன்பின் அசெம்பிள் செய்யும் பணி தொடங்கியது. அடுத்த 5 மாதங்களில் ஐபோன்-14 மொபைல் போன் அசெம்பிள் செய்யப்படுகிறது

click me!