2030க்கு முன் $35 பில்லியன் முதலீடு.. இந்தியாவில் அமேசானின் அடுத்தகட்ட பாய்ச்சல்

Published : Dec 10, 2025, 11:25 AM IST
 amazon

சுருக்கம்

அமேசான் நிறுவனம் 2030-க்குள் இந்தியாவில் கூடுதலாக 35 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இது இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உந்துதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசான் நிறுவனம் இந்தியாவில் தனது தொழில்துறையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், 2030க்குள் 35 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக கூடுதல் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதுவரை நிறுவனம் நாட்டில் 40 பில்லியன் டாலரை மீறி முதலீட்டை மேற்கொண்டுள்ளது. புதிய முதலீடு மூலம் செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் மயமாக்கல், ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகிய மூன்று முக்கிய துறைகளில் கவனம் செலுத்தப்பட உள்ளது.

புது டெல்லியில் நடைபெற்ற ஆறாவது அமேசான் உச்சிமாநாட்டில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டது. கீஸ்டன் வியூகத்தின் பொருளாதார தாக்கம், அமேசானின் இதுவரை செய்யப்பட்ட முதலீடுகள் இந்தியாவை அதன் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பட்டியலில் ஒன்றாக உயர்த்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் இ-காமர்ஸ் ஏற்றுமதியில் பெரிய பங்களிப்புடன், பல துறைகளில் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.

அமேசானின் முதலீடுகள் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் குறிப்பிடத்தக்கது. அறிக்கையின்படி, 1.2 கோடிக்கும் மேற்பட்ட சிறு வணிகங்களின் டிஜிட்டல் மயமாக்கல் நிகழ்ந்துள்ளது. மேலும் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான இ-காமர்ஸ் ஏற்றுமதி சாத்தியமாக்கப்பட்டுள்ளது. 2024ல் மட்டும் 2.8 மில்லியன் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை நிறுவனத்தின் செயல்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அமேசானின் வளர்ந்து வரும் சந்தைகளுக்கான மூத்த துணைத் தலைவர் அமித் அகர்வால், இந்தியாவின் டிஜிட்டல் மாற்ற பயணத்தில் தங்களின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. உள்ளதாகக் கூறினார். சிறு வணிக வளர்ச்சி, மேட்-இன்-இந்திய பொருட்களை உலக சந்தைகளுக்கு கொண்டு செல்வது போன்ற நோக்கங்களில் நிறுவனம் தொடர்ந்து செயல்படுகிறது வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2030 நோக்கில், மேலும் பல துறைகளில் விரிவான முன்னேற்றம் செய்ய அமேசான் முனைவதாக அகர்வால் கூறினார். 1 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகள், AI அணுகலை பொதுமக்களுக்கும் சிறு தொழில்களுக்கும் விரிவாக்கம், இ-காமர்ஸ் ஏற்றுமதியை 80 பில்லியன் டாலராக உயர்த்துதல் ஆகியவை முக்கிய இலக்குகளாக உள்ளன.

வரவிருக்கும் 35 பில்லியன் டாலர் முதலீடு, இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை வேகப்படுத்துதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், தொழில்நுட்பம் புதுமைகளை ஊக்குவித்தாலும் அமேசானின் முக்கிய நோக்கங்களாக இருக்கும்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Apparel Crisis: டிரஸ் விலை ராக்கெட் வேகத்துல ஏறப்போகுது; ஈரான் போரால் உலக ஜவுளி சந்தை ஸ்தம்பிப்பு!
8th Pay Commission Big Update: சம்பளம் 106% உயருமா? டிஏ இணைப்பு, ஃபிட்மென்ட் கணக்கு இதோ!