
22காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 4 நாட்களாக சரிந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி, தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 16ரூபாயும், சவரணுக்கு 128 ரூபாயும் அதிகரித்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,660க்கும், சவரண் ரூ.37,280க்கும் விற்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.16 விலை உயர்ந்து, ரூ4,676 ஆகவும், சவரணுக்கு ரூ.128 அதிகரித்து ரூ.37,408க்கும் விற்கப்படுகிறது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4676ஆக விற்கப்படுகிறது.
தங்கத்தின் விலை கடந்த 4-வது நாட்களாகச் சரிந்து வந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது. கடந்த இரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2ஆயிரம் வரை குறைந்தது.
விலை மேலும் குறையுமா
அமெரிக்காவில் பணவீக்கம் உச்சகட்டமாக கடந்த ஜூன் மாதத்தில் 9.1 சதவீதமாக அதிகரித்துள்ளது அதிகரி்த்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அந்நாட்டு பெடரல் வங்கி ஏற்கெனவே வட்டிவீதத்தை இருமுறை உயர்த்திவிட்டது. இந்த மாதக் கடைசியில் நடக்கும் நிதிக்கொள்கை கூட்டத்தில் வட்டியை மேலும் உயர்த்தும் எனத் தெரிகிறது.
ஒருவேளை வட்டி உயர்த்தப்பட்டால், டாலர் மதிப்பு மேலும் வலுப்பெறும், பல்வேறு நாட்டு கரன்ஸிகளின் மதிப்பும் நெருக்கடிக்குள்ளாகும். டாலர் மதிப்பு அதிகமாகும்போது, டாலரில் வாங்கும் தங்கத்தின் இறக்குமதியை குறைக்க வேண்டிய நிலைக்கு பல நாடுகள் தள்ளப்படும். இதனால், சர்வதேச அளவில் தங்கத்துக்கான தேவை, முதலீடு குறைந்து விலையும் வரும் நாட்களில் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு ஏற்றார்போல் சர்வதேச சந்தையில் 10 கிராம் தங்கம் விலை 0.86 சதவீதம் குறைந்து, ரூ50,226 ஆகக் குறைந்தது. கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவு விலை குறைவை தங்கம் சந்தித்தது.
வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 1.60 காசு அதிகரித்து, ரூ.62.30க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.600 அதிகரித்து ரூ.62,300க்கு விற்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.