9 லட்சம் பேருக்கு கெடு .....ஏப்ரல் 1 ஆம் தேதி பாயப்போகிறது வருமானவரித்துறை....!!!

Asianet News Tamil  
Published : Feb 17, 2017, 03:40 PM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
9 லட்சம் பேருக்கு கெடு .....ஏப்ரல் 1 ஆம் தேதி பாயப்போகிறது வருமானவரித்துறை....!!!

சுருக்கம்

9 லட்சம் பேருக்கு கெடு 

பழைய ரூபாய் நோட்டுகள்  செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்பு, மக்கள் தங்களிடமிருந்த அனைத்து  பணத்தையும்  வங்கியில் டெபாசிட்   செய்தனர்.  இதில் கருப்பு  பணமும்  அடங்கும்.

இதில் குறிப்பாக, 5 லட்சத்திற்கும் அதிகமாக வங்கி  கணக்கில் டெபாசிட் செய்தவர்களை மட்டும் வருமான வரித்துறையினர் கணக்கெடுத்து, வைத்துள்ளனர். அதன்படி 18 லட்சம் வாடிக்கையாளர்களின்  கணக்குகள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து விளக்கம் கேட்டு மெயில்  அனுப்பப்பட்டுள்ளது. இதில் சுமார் 5.27  பேர் இ-பைலிங் முறையில் பதிலளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கரீப் கல்யாண் திட்டம் 

கருப்புப் பணம், டெபாசிட் செய்தவர்கள், கரீப் கல்யாண் திட்டத்தின்  மூலம்,50 சதவீத வரி, அபராதம் மற்றும் கரீப் கல்யாண் திட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு வட்டியில்லா டெபாசிட்டாக 25 சதவீதம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் அடுத்த மாதம் 31ம் தேதி வரை அமலில் இருக்கும்  என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 1 ஆம் தேதி  முதல்   சோதனை

கருப்புப்பண விவகாரத்தில், சந்தேகிக்கப்பட்ட வர்களில்,  பதில்  அளிக்காத சுமார்  9 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வருமான வரித்துறை  சோதனை நடத்த  திட்டமிட்டுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.   

 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520.. வெள்ளி விலை ரூ.25,000 உயர்வு.. தாறுமாறாக எகிற இதுதான் காரணமா?
வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதி செய்தி.. வட்டி குறையுமா? பிப்ரவரி 6ல் முக்கிய முடிவு