7வது சம்பள கமிஷன்: இந்த மாநில அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு - முழு விபரம்

Published : Jun 24, 2023, 03:58 PM IST
7வது சம்பள கமிஷன்: இந்த மாநில அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு - முழு விபரம்

சுருக்கம்

7வது சம்பள கமிஷன்படி, இந்த மாநில அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு அதிகரிக்க உள்ளது. முழு விபரத்தை இங்கே காண்போம்.

மத்திய அரசு வழங்கும் அகவிலைப்படிக்கு இணையாக மாநில அரசு நான்கு சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தும். மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (டிஏ) 4% உயர்த்தி அறிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை இந்த ஆண்டு இறுதியில் திட்டமிடப்பட்ட மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வருகிறது. வெள்ளிக்கிழமை மாலை செஹோர் மாவட்டத்தில் உள்ள கில்லர் கிராமத்தில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது சவுகான் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மத்திய அரசு வழங்கும் அகவைக்கு இணையாக மாநில அரசு 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தும் என்றார் அவர். பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலத்தில் உள்ள 230 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு இந்த ஆண்டு நவம்பரில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

2018 தேர்தல் முடிவுகள் தொங்கு சட்டசபையை உருவாக்கியது. காங்கிரஸ் 114 இடங்களை வென்று தனிப் பெரிய கட்சியாக உருவெடுத்தது. அதே நேரத்தில் பாஜக 109 இடங்களைப் பெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் தலைமையில் ஆட்சி அமைத்தது. இ

ருப்பினும், ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு விசுவாசமான எம்.எல்.ஏக்கள் கிளர்ச்சி செய்த பின்னர், மார்ச் 2020 இல் அவரது ஆட்சி சரிந்தது. இது பாஜகவின் சவுகான் மீண்டும் முதல்வராக வர வழி வகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பி.எம் கிசான் திட்டம்.. ஒவ்வொரு மாதமும் ரூ.3000 கிடைக்கும்.! விவசாயிகள் செய்ய வேண்டியது இதுதான்.!

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

அனில் அம்பானிக்கு அதிர்ச்சி.! அமலாக்கத்துறை எடுத்த அஸ்திரம்.. இடியாப்ப சிக்கலில் ரிலையன்ஸ் பவர்
Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?