
பங்கு வர்த்தகம் உயர்வு :
சொத்து குவிப்பு வழக்கில் நேற்று சசிகலா , பெங்களூரு ஆக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டர். அவருடன் இளவரசி மற்றும் சுதாகரன் உள்ளிட்டோரும் சிறையில் அடைக்கப் பட்டனர். இதனால் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக சன் டிவி மற்றும் ராஜ் டிவி பங்குகள் உயர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சன் டிவி பங்குகள் 4 சதவீதம் உயர்வு
நேற்றைய வர்த்தகத்தின் இடையே சன் டிவி பங்குகள் 4 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது என்பது குறிபிடத்தக்கது . மேலும் வர்த்தக நேர முடிவில் 2.88 சதவீதம் உயர்ந்து 733.25 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு
கடந்த பிப்ரவரி 3-ம் தேதி ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுக்கப் பட்டதால் சன் டிவி பங்கு அப்போது 25 சதவீதம் வரை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.