Aadi Krithigai 2023 : ஆடி கிருத்திகை முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருவிழா..!!

Published : Aug 08, 2023, 10:03 AM ISTUpdated : Aug 09, 2023, 09:36 AM IST
Aadi Krithigai 2023  : ஆடி கிருத்திகை முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருவிழா..!!

சுருக்கம்

ஆடி கிருத்திகை முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள் ஆகும். முருகப்பெருமானின் ஆறு படை வீட்டில் ஆடி கிருத்திகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

ஆடி கிருத்திகை ஒரு முக்கியமான திருவிழா ஆகும். இது தமிழ் மாதம் ஆடி மாதமான ஆடி மாதத்தில் வருகிறது. அதன் படி இந்தாண்டு  ஆடி கிருத்திகை நாளை (ஆகஸ்ட், 9 ) வருகிறது. இந்த நாள் முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள் என்பதால் தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவில்களில் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமானின் ஆறு படை வீட்டில் (ஆறு முக்கிய கோயில்கள்) ஆடி கிருத்திகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஆடி கிருத்திகை நாளில் முருகனை மகிழ்விக்க சிறப்பு பூஜைகளும், ஹோமங்களும் நடைபெறுகின்றன. காவடி யாத்திரை ஆடி கிருத்திகை நாளில் முக்கிய சடங்கு ஆகும்.

இதையும் படிங்க:  Aadi Month 2023 : ஆடி மாத சிறப்பு விரதங்கள்? இந்த விரதம் இருங்க ஐஸ்வர்யம் பெருகும்..ஆயுள் நீடிக்கும்..!!

திருத்தணி முருகன் கோவில்:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியில் உள்ள ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயிலில் இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. முருகனுக்கு முக்கியமானதாகக் கருதப்படும் அறுபடை வீடுகளில் ஒன்றான இக்கோயிலுக்கு ஆடி கிருத்திகை நாளில் 400,000 பக்தர்கள் வருகிறார்கள். திருத்தணியில் நடைபெறும் உற்சவத்தில் இந்த நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் காவடி ஏந்தியும், மலையின் 365 படிகள் ஏறியும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு மூன்று நாள் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

இதையும் படிங்க:  Aadi Krithigai 2023: ஆடி கிருத்திகை எப்போது? தேதி, நேரம் மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..!!

ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் ஏன் முக்கியமானது?

  • கிருத்திகை நட்சத்திரம் முருகனை வழிபட மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. மேலும் ஆடி கிருத்திகை மிகவும் முக்கியமானது, ஏனென்றால் தட்சிணாயன புண்யகாலத்தின் முதல் மாதம் ஆடி. 
  • ஆடி கிருத்திகை நாளில் பக்தர்கள் பூ காவடி எடுத்து செல்கின்றனர். உலகெங்கிலும் உள்ள முருகன் கோவில்களில் பல்வேறு சடங்குகளுடன் இது சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
  • சண்முகர் என்றும் அழைக்கப்படும் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்கள் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டு, பால், பஞ்சாம்ருதம் மற்றும் அரிசி ஆகியவை அன்றைய பிரசாதமாக வழங்கப்படுகின்றன.
  • தமிழ்நாடு, கேரளா, இலங்கை, மலேசியா, தென்னாப்பிரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள முருகன் கோயில்களில் அன்றைய தினம் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் உள்ளன.
  • முருகனுடன் தொடர்புடைய ஒரு வருடத்தில் பிற பிரபலமான நாட்கள் தைப்பூசம் மற்றும் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் ஆகும்.

PREV
click me!

Recommended Stories

Astrology Tamil: ஜாதகத்தில் சனி பகவான் எந்த வீட்டில் அமர்ந்து இருக்கிறார்னு பாருங்க.! உங்களுக்கு என்ன பலன் கிடைக்கும்னு நாங்க சொல்றோம்.!
Numerology Love Life: பாசத்துல இவங்கள மிஞ்ச ஆள் இல்ல! ஆனா ஈகோன்னு வந்தா சாரி கேட்க மாட்டாங்க! 'ராடிக்ஸ் 1' காதலர்கள் இப்படித்தான்!