ராகு காலம்? இந்த நேரத்தில் இவற்றை ஒருபோதும் செய்யாதீங்க..!! இழப்பு ஏற்படும்..

Published : Aug 17, 2023, 11:12 AM ISTUpdated : Aug 17, 2023, 11:20 AM IST
ராகு காலம்? இந்த நேரத்தில் இவற்றை ஒருபோதும் செய்யாதீங்க..!! இழப்பு ஏற்படும்..

சுருக்கம்

ராகு காலத்தில் செய்யப்படும் அனைத்து நல்ல காரியங்களும் தோல்வி அடையும். எனவே ராகு காலம் துருதிஷ்டவசமாக கருதப்படுகிறது.

ராகு காலம் நாளின் மிகவும் மோசமான காலமாக கருதப்படுகிறது.  பெயர் குறிப்பிடுவது போல, ஒவ்வொரு நாளும் தோராயமாக ஒரு சிறிய காலம் உள்ளது.  ஒன்றரை மணிநேரம் ராகுவால் ஆளப்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே எந்தவொரு முக்கியமான வேலை அல்லது புதிய முயற்சிக்கும் மோசமானதாகக் கருதப்படுகிறது.  சில நம்பிக்கைகளின்படி, ராகு காலத்தில் தொடங்கப்பட்ட வேலை நல்ல பலனைத் தராது மற்றும் தோல்வியை மட்டுமே குறிக்கிறது.  

பொதுவாக மக்கள் ராகு காலத்தை சூரிய உதயமாக காலை 6:00 மணியாகக் கணக்கிடுகிறார்கள், இருப்பினும் ராகு காலத்தை சூரிய உதயத்திலிருந்து கணக்கிடுவதே சரியான வழியாகும். எனவே ஒவ்வொரு நாளும் சிறிது மாறுகிறது.  ஒவ்வொரு நகரத்திற்கும் சூரிய உதயம் மாறுபடுவதால் ராகு காலமும் மாறுகிறது.  

ராகு காலத்தில் போது ராகு கிரகங்களை மூடி மறைத்து மனதை வெறுமனே ஆக்குவது போல மனதை சுற்றி வருவார் என்று கூறப்படுகிறது. இதன் விளைவாக மனதெளிவு பாதிக்கப்படுகிறது. மேலும் அனைத்து முக்கியமான பணிகளும் பாழாகிவிடும் அபாயம் உள்ளது. எனவே ராகு காலம் துரதிஷ்டவசமாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க:  ராகு காலம், எமகண்ட நேரம் உண்மையில் கெட்ட நேரம் கிடையாது.. அப்போ இந்த காரியங்களை செய்தா இவ்ளோ நன்மைகள் இருக்கு!

ராகு காலத்தின் போது தவிர்க்க வேண்டியவை:

  • ராகு காலத்தின் போது நீங்கள் புதிய முயற்சிகள் திட்டங்கள் அல்லது வேலைகள் தொடங்குவது தவிர்க்க வேண்டும். 
  • ராகு காலத்தின் போது நீங்கள் வேலை சம்பந்தமான நோக்கங்களுக்காக பயணம் செய்யக் கூடாது.
  • திருமணம் அல்லது நிச்சயதார்த்தம் போன்ற இந்த ஒரு மங்களகரமான சடங்குகளையும் இந்நேரத்தில் செய்ய வேண்டாம். 
  • இதுபோல் ராகு காலத்தின் போது எந்த பரிவர்த்தனைகளும் இருக்கக் கூடாது. உதாரணமாக, நகைகள் வாங்குதல் அல்லது விற்க கூடாது.
  • இந்த நேரத்தில் ஒருவர் யாகம் செய்யக்கூடாது.

இதையும் படிங்க:   துன்பம் வரும் வேளையில் இந்த மந்திரம் சொல்லுங்கள்.. துணிச்சல் பிறக்கும்!

ராகு கால பரிகாரங்கள்:

  • ராகு காலத்தில் நடைபெறும் எந்த ஒரு பணியும் தொடங்குவதற்கு முன் நீங்கள் அனுமனை முழுமனதுடன் வணங்க வேண்டும். மேலும் அனுமான் மந்திரத்தையும் சொல்லியப் பின்னரே உங்கள் பணியை தொடங்க வேண்டும்.
  • ராகு காலத்தின் போது பயணம் செய்யும்போது வாழ்க்கை அல்லது இறப்பு பற்றி கேள்வி இருந்தால் பிரதான கதவு வழியாக வீட்டை விட்டு வெளியேறும் முன் எதிர்திசையில் 10 அடிகள் எடுத்து வைப்பது அவசியம் பிறகு உங்கள் வீட்டில் இருந்து புறப்படுங்கள்.
  • தயிர் அல்லது இனிப்பு போன்றவற்றை உட்கொண்ட பின்னரே நீங்கள் ராகு காலத்தில் பயணம் செய்ய வேண்டும் என்று மத மரபுகள் பரிந்துரைக்கின்றது. அவை சாதகமற்ற விளைவுகளை எதிர்கொள்வதில் அவை ஒரு நல்ல அடையாளமாக கருதப்படுகின்றன.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Jan 16 Kanni Rasi Palan: கன்னி ராசி நேயர்களே, இன்று நல்ல செய்திகள் வந்த வண்ணம் இருக்கும்.! ரெடியா இருங்க.!
Jan 16 Simma Rasi Palan: கொடி கட்டி பறக்கப்போகும் சிம்ம ராசி.! ஆனாலும் ஒரு ட்விஸ்ட் இருக்கு.!