2024 புத்தாண்டு ராசி பலன் : அடுத்த ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?

2024-ம் ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.


எவ்வளவு கடினமான சூழல் வந்தாலும், எதையும் உறுதியான சிந்தனையுடன் செயல்படுத்தும் கும்ப ராசிக்காரர்களே இந்த ஆண்டில் நீங்கள் அதிக வெற்றிகளை பெறுவீர்கள்..  உங்கள் பொருளாதார நிலையில் வளர்ச்சி உண்டாகும். தெய்வ வழிபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். தள்ளி வைத்திருந்த காரியங்களை செய்ய தொடங்வீர்கள். உங்களுடன் தெளிவான எண்ணத்தால் குடும்பத்தில் உங்கள் மதிப்பு மற்றும் மரியாதை உயரும். நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வந்த உடல் உபாதைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

உங்கள் பேச்சை திரித்துக்கூற வாய்ப்புள்ளதால் வெளியில் பேசும் போது கவனம் தேவை.. சில நேரங்களில் ஒரு கடனை அடைக்க இன்னொரு கடனை வாங்க வேண்டும் என்பதால் அவசியம் இல்லாத பொருட்களை வாங்க வேண்டாம். சகோதர சகோதரிகளிடம் அன்புடன் பழகி அவர்களின் ஆதரவை தக்கவைத்துக் கொள்வீர்கள்.

Latest Videos

 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பணியாளர்கள் எவ்வளவு முயற்சி செய்தால் உங்கள் வேலைகள் தடைகள் தாமதங்கள் ஏற்படும். உங்கள் வேலைகளில் கவனமாக வேலை செய்வதன் மூலம் மேலதிகாரிகளின் கண்டனங்களில் இருந்து தப்பலாம். உங்களிடம் உள்ள ஆவணங்களை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம். சக ஊழியர்களால் தொல்லைகள் ஏற்படும் என்பதால் அவர்களிடம் பணிவுடனும் சுமூகமாகவும் நடந்து கொள்வது முக்கியம்.

குடும்பத்தில் அவ்வபோது சிறு சிறு பிரச்சனைகள் தோன்றலாம். எனவே கோபத்தைக் கட்டுப்படுத்தி பொறுமையாக இருப்பது அவசியம். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் இருக்காது என்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது. மேலும் கடன் வாங்குவதை தவிர்த்து ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வதன் மூலம் நஷ்டம் ஏற்படாமல் தடுக்கலாம். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளுடன் மனக்கசப்பு ஏற்படக்கூடும். இதனால் கவனம் தேவை.

 

2024 புத்தாண்டு ராசி பலன் : அடுத்த ஆண்டு மகர ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?

மாணவர்கள் ஒருமுறைக்கு பலமுறை பாடங்களை படிக்க வேண்டிய நிலை உருவாகும். விளையாட்டுகளில் கவனத்தை குறைத்து படிப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் கல்வியில் மேன்மை அடைய முடியும். நினைவாற்றல் அதிகரிக்கும் பயிற்சியில் ஈடுபட்டால் வெற்றி பெறலாம்.

குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும் பின்னர் நிவர்த்தியாகிவிடும். கோபத்தை குறைத்து கொள்வதன் மூலம் பல சிக்கல்களை தடுக்கலாம். உங்கள் ரகசியங்களை வெளியே சொல்லாமல் இருப்பது நன்மை பயக்கும்.

click me!