Osteoporosis: ஆஸ்டியோபோரோசிஸ்; எலும்பு பொல பொலன்னு; டக்குன்னு உடையும்; உங்க ஜாதகத்தை செக் பண்ணுங்க!!

By Asianet TamilFirst Published Jul 10, 2024, 9:51 AM IST
Highlights

உடம்பில் நோய் வந்தாலே டாக்டர்களிடம் போகும் அதே நேரத்தில் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோதிடர்களிடம் செல்பவர்கள் இருக்கிறார்கள். நோய்க்கு மருத்துவம் பார்க்கும் அதே நேரத்தில் சில பரிகாரங்களையும் செய்தால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படாமல் தப்பிக்கலாம். ஆஸ்டியோபோரோசிஸ் எனும் எலும்பு நலிவு நோய் எந்த ராசிக்காரர்களுக்கு வரும்  அதற்கான பரிகாரமாக மருத்துவ ஜோதிடத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று பார்க்கலாம்.

ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புப்புரை என்னும் நோயாகும். இந்த நோயானது எலும்பை உருக்கி எலும்பு முறிவை ஏற்படுத்துவதோடு, கழுத்து மற்றும் முதுகு வலியை ஏற்படுத்தி காலப்போக்கில் உயரம் 6 அங்குலம் வரையில் குறைய வழி செய்துவிடும்.
எலும்புகள் அரிப்பால் பலகீனமடைந்திருக்கும் போது பலமாக இருமினால் கூட அல்லது வேகமாக நடந்து செல்லும்போது தடுக்கினால் கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது.

ஆஸ்டியோபோரோசிஸ்:

உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் ஆஸ்டியோபோரோசிஸ் எனும்  எலும்பு வலுவிழப்பு நோயால் பாதிக்கப்படுவதாக மருத்துவ உலகம் சொல்கிறது. பெண்களுக்கு சாதாரணமாக அதிக அளவில் ஏற்படும் மார்பகப் புற்றுநோய், இதய நோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளைவிட எலும்பு அரிப்பு' தான் அதிக அளவில் ஏற்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் ஒரு புள்ளி விவரம். அதிக உடல் உழைப்பு இல்லாதது மற்றும் மோசமான உணவு முறை போன்றவையும் இதற்கு காரணமாகின்றன.

ஆஷாட பஞ்சமி.. வாராஹி அம்மனை இன்று இப்படி வழிபட்டால் தீராத கடனும் தீரும்!!

எலும்பு பலவீனம்:

எலும்புகளை பலவீனப்படுத்தி எலும்பு முறிவு அபாயத்தை உண்டு செய்யும் இது மெனோபாஸ் அல்லது மெனோபாஸுக்கு பிறகு வெளிப்படுத்தும் என்பதால் இது குறித்து ஒவ்வொரு பெண்களும் அறிய வேண்டியது அவசியம். பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான், இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனித்தன்மை. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். சிறிய மற்றும் ஒல்லியான பெண்களுக்கு ஆஸ்டியோபோராசிஸ் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

நவ கிரகங்கள்:

எலும்புக்கு காரகனாக சூரியனும் எலும்பிலுள்ள மஜ்ஜைக்கு காரகனாக செவ்வாய் இருந்தாலும் ஆஸ்டியோபோரோசிஸ் எனும் எலும்பு புரை நோய்க்கும் மந்தன் எனப்படும் சனீஸ்வரனே முக்கிய பங்கு வகிக்கிறான். மேலும் ஆயுர்வேதத்தில் எலும்பு புரை நோயை வாத நோயாகவே குறிப்பிடுகின்றனர். எனவே வாத கிரஹங்களான சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்களின் நிலையும் வாத நோயை ஏற்படுத்துகின்றது. சூரியன் மற்றும் செவ்வாயும் சனியுடன் அசுப சேர்க்கை பெறுவதும் கூட எலும்பு புரை நோயை ஏற்படுத்துகிறது.

சனியும் செவ்வாயும்:

உடம்பின் கட்டுமானத்திற்கு முக்கியமான எலும்பு தொடர்பான வியாதிகளை ஜாதகத்தில் நில ராசி அதிபதிகளின் நிலையை கொண்டு அறிய முடிகிறது. அந்த விதத்திலும் நில ராசி அதிபதிகளான ரிஷபம் சுக்கிரன், கன்னி புதன் மற்றும் மகரம் சனி ஆகியவற்றின் தொடர்பு எலும்பு புரை நோயை ஏற்படுத்துகிறது. கால்சியம் எனும் தாதுவிற்கு காரக கிரகம் சனியே ஆகும். மேலும் கால்சியம் சமநிலைக்கு மாங்கனிசு எனப்படும் மெக்னிஷியத்திற்கு காரக கிரகம் சூரியன் இரும்பு சத்துக்கு காரக கிரகம் செவ்வாய் ஆகியவற்றின் நிலைப்பாடும் இந்த நோய் ஏற்பட காரணமாகிறது.

சூரியன் சனி தொடர்பு:

எலும்பிற்கு காரக கிரகமான சூரியன் சனியுடன் எந்தவிதத்தில் தொடர்பு கொண்டாலும் எலும்பு மற்றும் வாத நோய் ஏற்படுகிறது. மேலும் சூரியன் 6,8,12 வீடுகளுடன் தொடர்பு பெறும்போது ஜாதகருக்கு வாதநோய் ஏற்படுகிறது. சூரியன், சந்திரன் செவ்வாயுடன் சேர்க்கை பெற்று லக்னத்தில் நின்றாலும் வாதநோய் ஏற்படுகிறது.

நீரிழிவு நோயாளிகள்:

சர்க்கரை சத்து எனப்படும் நீரிழிவு நோய் அதிகமாவதும் கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்தி எலும்பு புரைநோயை ஏற்படுத்துகிறது. சர்க்கரை சத்திற்கான காரக கிரகம் சுக்ரன் ஆகும். உடம்பில் வைட்டமின் D3 எனப்படும் மெக்னீஷியம் குறைபாடு உள்ளவர்களை சூரிய வெளிச்சத்தில் நிற்க சொல்லுவது அனைவரும் அறிந்ததே.

Latest Videos

Daily Rasipalan Tamil : நெருப்புடா!! தொட்டாலே சுர்ரென்று கோபம் வரும் ரக்கட் பசங்க எந்த ராசிக்காரங்க தெரியுமா?

முன்னோர்கள் சொன்ன வைத்தியம்:

கால்சியம் சத்துள்ள பால் பொருட்கள், நெய் போன்றவைகளை அதிகம் அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை நம் வீட்டில் இருந்த முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.  பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது. சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது. வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் எலும்புகளையும் வலுப்படுத்துகிறது.

என்ன பரிகாரம் செய்யலாம்:

பிறந்த ஜாதகத்தில் சூரியன் பாதிக்கப்பட்டவர்கள் தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்வது அவசியம். ஆதித்ய ஹிருதயம் படிக்கலாம். செவ்வாய்கிழமைகளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கலாம். துவரம் பருப்பு தானம் கொடுக்கலாம். செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாம். சனிக்கிழமைகளில் ஆண்கள் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாம். சனி பகவானுக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபடலாம்.

click me!