This Week Rasi Palan: மகர ராசி நேயர்களே, உங்கள் பிரச்சனைகள் எல்லாம் இந்த வாரம் முடிவுக்கு வரப்போகுது.!

Published : Dec 29, 2025, 04:36 PM IST
Intha Vaara Rasi Palan Magaram

சுருக்கம்

Magara Rasi This Week Rasi Palan: டிசம்பர் 29 முதல் ஜனவரி 04 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மகர ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

இந்த வார ராசிப்பலன்கள் - மகரம்

மகர ராசி நேயர்களே, இந்த வாரம் புதிய முயற்சிகளில் ஈடுபாடு காட்டுவீர்கள். ஏழரை சனியின் தாக்கம் குறைந்து வருவதால் மனதில் இருந்த பயம் நீங்கும். புதிய தெளிவு பிறக்கும். பழைய கவலைகளை தூக்கி எறிந்து விட்டு புதிய இலக்குகளை நோக்கி பயணத்தைத் தொடங்குவீர்கள். கிடைக்கும் செய்திகள் அனைத்தும் மகிழ்ச்சிகரமானதாக அமையும்.

நிதி நிலைமை:

இந்த வாரம் வரவும், செலவும் சமமாக இருக்கும். சூரிய பகவானின் நிலையால் வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சுப காரியங்களுக்காக பணம் செலவழிக்க நேரலாம். பழைய கடன்களை திருப்பி செலுத்துவதற்கான சூழல் நெருங்கியுள்ளது. யாருக்காகவும் ஜாமின் கையெழுத்து போடுவதை தவிர்ப்பது நல்லது. முதலீடுகளில் நிதானம் தேவை.

ஆரோக்கியம்:

உடல் நிலையில் சிறு அசௌகரியங்கள், தூக்கமின்மை, கண் எரிச்சல் போன்ற உபாதைகள் வரலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். வெளி உணவுகளைத் தவிர்ப்பது வயிறு உபாதைகளை தடுக்கும். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விஷயங்களில் இருந்து விலகி இருங்கள். தினமும் காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது புத்துணர்ச்சி தரும்.

கல்வி:

மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய வாரமாகும். ஆரம்பத்தில் மந்த நிலை இருந்தாலும் இறுதியில் வேகம் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு புதிய யுக்திகளை கண்டுபிடிப்பீர்கள். ஆசிரியர்களின் ஆலோசனைகள் உங்களுக்கு உதவியாக இருக்கும். உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும்.

தொழில் மற்றும் வியாபாரம்:

அலுவலகத்தில் உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் தாமதமாக கிடைக்கலாம். இருப்பினும் உங்களுக்கான அங்கீகாரம் கிடைத்தே தீரும். சக ஊழியர்களுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வேலை தேடுபவர்களுக்கு வார இறுதியில் நல்ல செய்திகள் கிடைக்கும். தொழில் செய்து வருபவர்களுக்கு சாதகமான வாரமாக இருக்கும். தேங்கி கிடந்த சரக்குகள் விற்பனையாகும். தொழிலை விரிவுபடுத்துவது குறித்து சிந்திப்பீர்கள்.

குடும்ப உறவுகள்:

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த சிறிய பிரச்சனைகள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் வழியாக சுப செய்திகள் கிடைக்கலாம். வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை. உறவினர்களுடன் பேசும் பொழுது வார்த்தைகளில் நிதானம் அவசியம். வார்த்தைகளை அளந்து பேசுவது தேவையற்ற விரிசல்களைத் தவிர்க்கும்.

பரிகாரம்:

திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் சிவாலயங்களுக்கு சென்று சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடுவது நன்மை தரும். ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்யலாம். இயலாதவர்களுக்கு தயிர் சாதம் அல்லது உங்களால் முடிந்தவற்றை வழங்குவது நன்மைகளை அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

This Week Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, அடுத்த 7 நாட்களுக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.! தொழிலில் அமோக லாபம்.!
This Week Rasi Palan: விருச்சிக ராசி நேயர்களே, குருவின் பார்வையால் இந்த வாரம் பொற்காலமாக அமையும்.!