This Week Rasi Palan: விருச்சிக ராசி நேயர்களே, குருவின் பார்வையால் இந்த வாரம் பொற்காலமாக அமையும்.!

Published : Dec 29, 2025, 03:37 PM IST
Intha Vaara Rasi Palan Viruchigam

சுருக்கம்

Viruchiga Rasi This Week Rasi Palan: டிசம்பர் 29 முதல் ஜனவரி 04 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

இந்த வார ராசிப்பலன்கள் - விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, இந்த வாரம் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, தீர்க்கமான முடிவுகளை எடுப்பீர்கள். மனதில் தெளிவு பிறக்கும். தைரியமும், தன்னம்பிக்கை அதிகரிக்கும். தடைப்பட்ட காரியங்கள் குருவின் பார்வையால் வேகமெடுக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகலாம்.

நிதி நிலைமை:

பண வரவு திருப்திகரமாக இருக்கும். குறிப்பாக வாரத்தின் மத்தியில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து மன நிம்மதி அடைவீர்கள். தேவையில்லாத செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சிக்கனம் தேவை. பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் வர வாய்ப்புள்ளது. முதலீடுகள் செய்வதற்கு முன்னர் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

ஆரோக்கியம்:

ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவைப்படும் வாரமாக இருக்கும். பயணங்களின் போது உணவு கட்டுப்பாட்டைப் பின்பற்றுவது அவசியம். செரிமானக் கோளாறுகள் அல்லது உஷ்ணம் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். வயதானவர்களுக்கு மூட்டு வலி அல்லது கால் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது விபத்துக்களை தவிர்க்க உதவும். மன அழுத்தத்தைக் குறைக்க தியானம் மற்றும் யோகா மேற்கொள்ளலாம்.

கல்வி:

மாணவர்களுக்கு இந்த வாரம் பொற்காலமாக அமையும். குருவின் பார்வை கல்வியில் முன்னேற்றத்தைத் தரும். ஞாபக சக்தி அதிகரிக்கும். ஆசிரியர்கள் மற்றும் பெரியவர்களின் வழிகாட்டுதல் வெற்றியைத் தரும். மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு சாதகமான சூழல் நிலவும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

தொழில் மற்றும் வியாபாரம்:

வேலையில் இதுவரை இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். தொழில் செய்து வருபவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டுத் தொழிலில் லாபம் இரட்டிப்பாகும். வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு கூடும்.

குடும்ப உறவுகள்:

குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் மறையும். குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டில் நடக்கும் மங்கள நிகழ்வுகளால் வீடு களை கட்டும். தாய் வழி உறவினர்களுடன் சிறிய மனஸ்தாபம் வரலாம் என்பதால் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத் துணையின் உடல்நலனில் அக்கறை காட்டுவது நல்லது.

பரிகாரம்:

வள்ளி தெய்வானை சமேதராக இருக்கும் முருகப் பெருமானை வழிபடுவது நல்லது. ஏழை எளியவர்களுக்கு போர்வை அல்லது அன்னதானம் செய்வது புண்ணியத்தைத் தரும். தினமும் ‘சரவணபவ’ மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்வது நல்லது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

This Week Rasi Palan: துலாம் ராசி நேயர்களே, இந்த வாரம் அமோகமா இருக்கும்.! தடைகள் எல்லாம் தவிடு பொடியாகும்.!
Budhan Peyarchi 2025: கேது வீட்டில் அமர்ந்த புதன்.! இந்த 5 ராசிகளுக்கு அடி மேல் அடி விழப்போகுது.! கஷ்டம் மேல் கஷ்டம் வருமாம்.!