பஞ்சகவ்யாவை இந்த முறைப்படி தயாரித்தால்தான் அதன் அத்தனை பயன்களையும் பெற முடியும்...

 
Published : May 31, 2018, 01:08 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
பஞ்சகவ்யாவை இந்த முறைப்படி தயாரித்தால்தான் அதன் அத்தனை பயன்களையும் பெற முடியும்...

சுருக்கம்

Panchakavya can be made in this manner and can get all its benefits ..

பஞ்சகவ்யா

இயற்கை விவசாய உத்தியான பஞ்சகவ்யா தயாரிப்பது மிக எளிது. அதற்கு பசுமாடு தான் தேவை. அதுவும் நாட்டு மாடு தான் நல்லது என்ற பிரசாரம் செய்து சில நாட்டு மாடு வியாபாரிகள் நல்ல காசு பார்த்து வருவது அறியாமை. ஒவ்வொரு விலங்கும் கழிவினை வெளியிடுவது இயற்கை. 

இதில் நாட்டு மாடு வேற மாதிரி கோமியம் தரும். வேற மாடு வேஸ்ட் என்று கூட பிரச்னை செய்வது நல்லதல்ல. மாடுகள் உண்ணும் உணவில் எந்த மாறுபாடும் நாம் காட்டாத போது கழிவு எப்படி வேறுபடும். 

ஒவ்வொரு விவசாயி வீட்டிலும் பசுமாடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. கன்றுக்குட்டிகளாவது வளர்த்து வரலாம். அல்லது ஆடு வளர்க்கலாம். அருகில் உள்ள விவசாயிகளிடம் விலை கொடுத்து கூட பசுமாட்டு சிறுநீர் 3 லிட்டர் வாங்குவது பெரிய கஷ்டமான வேலையே இல்லை.

வீட்டை விட்டு வெகு தொலைவில் உள்ள கடைக்குப்போய் மருந்து அதிக விலை கொடுத்து வாங்க மனம் உள்ளவருக்கு அருகில் கிடைக்கும் கழிவினை வாங்குவது ஒன்றும் பெரியதாக தென்படாது. 

மிகவும் எளிய பொருள் தான் பஞ்சகவ்யா. அது தயாரித்திட பச்சை பசுஞ்சாணம் 5 கிலோ, பசுமாட்டு சிறுநீர் 3 லிட்டர், பசும்பால் 2 லிட்டர், தயிர் 1 லிட்டர், நெய் – 1லிட்டர், நாட்டு சர்க்கரை 1 கிலோ, இளநீர் 3 லிட்டர், வாழைப்பழங்கள் 12 எண் தேவை. 

பச்சை பசு சாணி 5 கிலோவுடன் பசுமாட்டு நெய் 1 லிட்டரை கலந்து பிசைந்து ஒரு வாயகன்ற மண்பானையில் 4 அல்லது 5 நாட்கள் வைக்கவும். இதை தினம் இருமுறை அதாவது காலை மற்றும் மாலை வேளைகளில் நன்கு கலக்கவும்.

ஐந்தாவது நாள் மற்ற பொருட்களுடன் இவைகளை நன்கு கலக்கி விடவும். கம்பி வலையில் வாயை மூடி நிழலில் வைக்கவும். தினம் இருமுறையோ அல்லது பல முறையோ நன்கு கலக்கி விடவும். இதனால் அதிக காற்றோட்டம் ஏற்பட்டு அபரிதமாக நுண்ணுயிர்கள் உற்பத்தி ஆகும் வாய்ப்பும் 15 நாளில் பஞ்சகவ்யா ரெடியாகும் வாய்ப்பும் உள்ளது. 

இதை ஆறு மாதம் வரை தினமும் கலக்கி விட்டு கெடாமல் பயன்படுத்தலாம். தண்ணீர் குறைத்து கெட்டியான மீண்டும் போதிய அளவு தண்ணீர் சேர்த்து கலக்கி வர வேண்டும்.

10 லிட்டர் நீரில் 300 மில்லி பஞ்சகவ்யா கலந்து கொண்டு இலைவழி உரம் அல்லது பயிர்க்கு, நேரடியாக ஊற்றுதல் மூலம் பலன்பெறலாம். கைத்தெளிப்பானில் தெளிக்கும்போது வடிகட்டி பயன்படுத்தவும். 

விசைத் தெளிப்பானின் அடைப்பானையுடன் குழாயின் நுனிப்பகுதியையும் பெரிதாகச் செய்து கொண்டால் அடைப்பின்றி தெளிப்பு சீராக வரும் பஞ்சகவ்யா 75 சதம் உரமாகவும் 25 சதம் பூச்சி மற்றும் நோய்கொல்லி மருந்தாகவும் வேலை செய்து நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. 

PREV
click me!

Recommended Stories

Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?
Agri Export: வாழை விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! இனி நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்.! வழிகாட்டுகிறது தமிழக அரசு.!