வீட்டில் எறும்புகள், ஈக்கள் வருவதற்கு முக்கிய காரணம் அழுக்கு மற்றும் உணவு பொருட்கள் தான். எனவே வீட்டை எப்போதுமே சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
வீட்டில் எறும்புகள் இருக்கும் இடத்தில் எலுமிச்சை சாறு, சிறிதளவு உப்பு தெளிக்கவும். எலுமிச்சையில் இருக்கும் அமிலம் எறும்புகளை விரட்டியடிக்கும்.
ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வினிகர், தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஈக்கள், எறும்புகள் அதிகமாக இருக்கும் இடத்தில் தெளித்தால், அவை ஓடிவிடும். மீண்டும் வீட்டிற்குள் நுழையாது.
கிராம்பு மற்றும் பிரியாணி இலையில் இருந்து வரும் கடுமையான வாசனை எறும்புகள், ஈக்களை விரட்டியடிக்கும். எனவே இவற்றை சமையலறை, உணவு வைக்கும் இடத்தில் வைக்கவும்.
வீட்டின் ஈரப்பதம், இருள் காரணமாக எறும்புகள், ஈக்கள் வரும். எனவே சூரிய ஒளி சுத்தமான காற்று வீட்டிற்குள் வரும் வகையில் வீட்டின் கதவை சிறிது நேரம் திறந்து வைக்கவும்.
வீட்டில் குப்பைகளை திறந்து வைத்தால் ஈக்கள் பெருகும். எனவே குப்பைகளை எப்போதுமே மூடி வைக்கவும். முக்கியமாக உடனே அப்புறப்படுத்தி விடுங்கள்.