நிம்மதியா தூங்கணுமா? தூங்கும் முன் இந்த 1 விஷயத்தை பண்ணுங்க போதும்!
பாதங்களைச் சுத்தம் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை இங்கே பார்க்கலாம்.
life-style Apr 03 2026
Author: Ganesh A Image Credits:Our own
Tamil
நிம்மதியான உறக்கத்திற்கு
இன்றைய பிஸியான வாழ்க்கை முறையால், பலரும் தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள். ஆனால், எந்த செலவும் இல்லாமல் நிம்மதியான உறக்கத்தைப் பெற சில வழிகள் இருக்கிறது.
Image credits: Getty
Tamil
உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு
ஆமாம். ஆயுர்வேதம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின்படி, தூங்குவதற்கு முன் கால்களைக் கழுவுவது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
Image credits: Social Media
Tamil
உடல் சூடு குறையும்
தூங்கும் முன் குளிர்ந்த நீரில் கால்களை கழுவினால், உடல் சூடு குறையும். இது, தூங்குவதற்கான நேரம் வந்துவிட்டது என்று மூளைக்கு சிக்னல் கொடுத்து, விரைவில் தூக்கம் வர உதவுகிறது.
Image credits: Getty
Tamil
மன அழுத்தத்திலிருந்து விடுதலை
பாதங்களில் பல அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன. கால்களில் தண்ணீர் படும்போது, அந்தப் புள்ளிகள் தூண்டப்பட்டு, நாள் முழுவதும் ஏற்பட்ட சோர்வு மற்றும் மன அழுத்தம் குறைகிறது.
Image credits: Getty
Tamil
தனிப்பட்ட சுகாதாரம்
ஷூ, செருப்பு அணிந்து நடப்பதால், பாதங்களில் பாக்டீரியா மற்றும் வியர்வை துர்நாற்றம் இருக்கும். கால்களை கழுவிவிட்டு தூங்குவதால், படுக்கை விரிப்புகள் அழுக்காகாது, தோல் தொற்றுகள் பரவாது
Image credits: linkedin
Tamil
ரத்த ஓட்டம் சீராகும்
கால்களை கழுவிய பின் தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்வதால், ரத்த ஓட்டம் மேம்படும். ஆயுர்வேதத்தின்படி, இது கண் பார்வையைத் கூர்மையாக்கவும், உடலில் உள்ள 'வாத' தோஷத்தைச் சமநிலைப்படுத்தும்.