லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு இது வாயு, வீக்கம் வயிற்று பிடிப்பு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
பனீரில் கொழுப்பு, கலோரி அதிகமாக உள்ளதால் எடையை அதிகரிக்க செய்யும்.
பனீரில் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகமாக உள்ளதால் இதன் அதிகப்படியான நுகர்வு உடலில் கெட்ட கொழுப்பின் அளவு உயர்த்தி, இதய நோய் அபாயம் அதிகரிக்கும்.
கடைகளில் விற்பனையாகும் பனீரில் உப்பு அதிகமாக இருப்பதால் அதன் அதிகப்படியான நுகர்வு உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
பனீரை பிரதான உணவாக சாப்பிட்டால் மற்ற உணவுகளில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை உடலில் குறைவாகவே இருக்கும்.
சிலருக்கு பால் ஒவ்வாமையை ஏற்படுத்தும். அத்தகையவர்கள் பனீர் சாப்பிட்டால் அரிப்பு, வீக்கம்,.தடிப்புகள் ஏற்படும்.
கலப்படம் பனீர் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள், உறுப்பு சேதங்கள் ஏற்படும்.
பனீரில் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால் அதை அதிகமாக சாப்பிட்டால் சர்க்கரை நோயாளிகளின் குளுக்கோஸ் கட்டுப்பாடு பாதிக்கப்படும்.
மழைக்காலத்துல வெல்லம் போட்ட 'டீ' குடித்தால் அவ்வளவு நன்மைகள்!
மூளையை கோளாறாக்கும் '7' மோசமான பழக்கங்கள்
முட்டையை 'இப்படி' சாப்பிட்டால் எடை வேகமா குறையும்!
உப்பு ரொம்ப கம்மியா எடுத்துக்குறீங்களா? ஜாக்கிரதை!