வெள்ளரிக்காய், தயிர் இவை இரண்டும் குளிர்ச்சியான தன்மையுடையது. இந்த இரண்டும் ஒன்றாக சேர்ந்தால் அதிகப்படியான சளி, இருமலை ஏற்படுத்தும். இதுதவிர, செரிமானத்தை மெதுவாக்கும்.
வெள்ளரிக்காயில் காரத்தன்மையும், தக்காளியில் அமிலத்தன்மை உள்ளது. இவை இரண்டும் ஒன்றாக சேர்ந்தால் அமில-கார எதிர்வினை ஏற்படுத்தும். இதனால் வாயு, அஜீரணம், நெஞ்செரிச்சல் ஏற்படும்.
வெள்ளரிக்காய் சாப்பிடும் போது அதிக உப்பு மற்றும் அசலா பொருட்கள் சேர்க்க வேண்டாம். காரணம் இவை வெள்ளரிக்காயின் ஆரோக்கியமான கூறுகளை பலவீனப்படுத்தும், உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும்.
வெள்ளரிக்காயில் தண்ணீர் நிறைந்துள்ளதால், அதை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். மேலும் வாயுத்தொல்லை, மலச்சிக்கல் பிரச்சனை அதிகரிக்கும்.
வெள்ளரிக்காயை பகலில் அதுவும் குறிப்பாக மதிய உணவுக்கு பிறகு சாப்பிடுவது நல்லது.
காலையில் வெறும் வயிற்றில் வெள்ளரிக்காயை சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும் மற்றும் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.
வெள்ளரிக்காயை வாங்கி வந்த உடன் சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். ஏனெனில் அதன் மேல் ரசாயனங்கள், மெழுகு போன்றவை படிந்திருக்கலாம். இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.