தற்போது வெப்பம் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் உடல்நலம் மோசமடையும் அபாயம் உள்ளது. எனவே நீரேற்றமாக இருப்பது ரொம்பவே முக்கியம்.
வெயிலின் தாக்கத்தால் சோர்வு ஏற்படுவது பொதுவானது. மேலும் இது பல பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். இதுபோன்ற சூழ்நிலையில் அதை எவ்வாறு தடுப்பது என்று இங்கு பார்க்கலாம்.
கோடை வெயில் தாக்கத்தால் சோர்வு, தலைசுற்று, வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் உலர்ந்த நெல்லிக்காய் மற்றும் கொத்தமல்லி உங்களுக்கு உதவும்.
உலர்ந்த நெல்லி மற்றும் கொத்தமல்லியை தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் இதனால் தலைசுற்று, சோர்வு ஏற்படாது.
சாப்பிட்டு ஒரே இடத்தில் உட்கார்ந்தாலும் நீங்கள் சோர்வை ஏற்படுத்தும். எனவே கோடையில் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள்.
கோடையில் முளைகட்டிய பயிரை சாப்பிடுங்கள். இது தவிர ஒரு நாளைக்கு குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீர் குடியுங்கள்.
கோடை வெப்பத்தால் ஏற்படும் சோர்வைப் போக்க இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். உதாரணமாக கீரை, பூசணி விதைகள், இறைச்சி போன்றவையாகும்.
டீ காபிக்கு பதிலாக வைட்டமின் சி நிறைந்த பழங்களை சாப்பிடுங்கள். இது தவிர தினமும் இரண்டு கருப்பு திராட்சையை ஊற வைத்து சாப்பிடவும்.