வயிறு உப்பசம் மற்றும் கேஸ் பிரச்சனை என்பது பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான தொல்லை. இதற்கு ஒரு எளிய பானம் நல்ல நிவாரணம் தரும்.
சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் வயிறு உப்பிசம் மற்றும் கேஸ் தொல்லை ஏற்படும். இந்த பிரச்சனையை சரிசெய்ய உதவும் ஒரு சூப்பர் பானத்தைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
நம் வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஆரோக்கியமான பானம், கேஸ் பிரச்சனையை எளிதில் சரிசெய்யும்.
எலுமிச்சை சாறு, கரு மிளகு, மற்றும் பெருங்காயம் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த பானம், பல்வேறு செரிமான பிரச்சனைகளை சரிசெய்யும். சில நிமிடங்களிலேயே உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
அரை கப் தண்ணீரை சூடாக்கி, அதில் அரை எலுமிச்சையின் சாறு, ஒரு சிட்டிகை பெருங்காயம், மற்றும் ஒரு சிட்டிகை மிளகுத் தூள் சேர்க்கவும். பொருட்கள் கரையும் வரை நன்கு கலந்து, பின் பருகவும்.
பெருங்காயத்தில் உள்ள ஃபெருலிக் அமிலம் போன்ற சேர்மங்கள், செரிமான நொதிகளைத் தூண்டி, குடல் தசைகளைத் தளர்த்துவதன் மூலம் செரிமானத்திற்கு உதவுகின்றன.
எலுமிச்சை சாறு அமில உற்பத்தியை அதிகரித்து செரிமானத்திற்கு உதவும். அதே நேரத்தில், கரு மிளகு வாயு உருவாவதைக் குறைக்க உதவுகிறது.
இந்த பானத்தில் உள்ள ஆன்டி-ஸ்பாஸ்மோடிக் பண்புகள் அஜீரணத்தைக் குறைத்து, ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.