cinema

மர்மங்கள் நிறைந்த நடிகை ஸ்ரேயா வாழ்க்கை!!

Image credits: Instagram

ஸ்ரேயா சரண்

கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட்டிலும் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரேயா சரண் தனது 42வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். தனது வாழ்வில் பல போராட்டங்களை சந்தித்து வெற்றி பெற்றவர் ஸ்ரேயா.

ஸ்ரேயா நடிகையானது எப்படி?

நடனத்தில் சிறந்து விளங்கிய ஸ்ரேயா ஒரு இசை ஆல்பத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். இந்த ஆல்பம் தான் அவருக்கு திரைப்பட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

மர்மங்களால் நிறைந்த வாழ்க்கை

நடிகையாக புகழ்பெற்ற ஸ்ரேயா சரணின் வாழ்க்கை மர்மங்களால் நிறைந்துள்ளது. தனது தனிப்பட்ட வாழ்க்கையை மிகவும் ரகசியமாக வைத்திருப்பதால் அவர் மர்மப் பெண் என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்ரேயா சரணின் ரகசிய திருமணம்

ஸ்ரேயா சரண் மார்ச் 2018 இல் ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்ரி கோஷ்சீவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். 

ஸ்ரேயா சரண் மறைத்தது

திருமணத்தைப் போலவே ஸ்ரேயா சரண் தனது கர்ப்பத்தைப் பற்றியும் மறைத்து வைத்திருந்தார். அந்த சமயத்தில் அவர் எங்கே இருந்தார், என்ன செய்து கொண்டிருந்தார் என்பது யாருக்கும் தெரியாது.

ஸ்ரேயா சரண் மகள் ரகசியம்

கொரோனா காலத்தில் தான் ஒரு பெண் குழந்தைக்கு தாயானார் ஸ்ரேயா. தனது மகளுக்கு ராதா என்று பெயரிட்ட அவர், தனது மகள் ஒரு வயதை எட்டிய பிறகு தான் இந்த தகவலை வெளியிட்டார்.

ஸ்ரேயா சரண் திரைப்பயணம்

ஸ்ரேயா சரண் 2001 ஆம் ஆண்டு ஒரு தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தற்போது 'சூர்யா 44' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் 2025 ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

Find Next One