ஜோம்பி பனி மலைகள் உருகி கடல் மட்டம் உயரும் அபாயம்; காரணம் என்ன?

Published : Aug 30, 2022, 02:12 PM IST
ஜோம்பி பனி மலைகள் உருகி கடல் மட்டம் உயரும் அபாயம்; காரணம் என்ன?

சுருக்கம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் சில பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. ஆனால், சீனாவின் சில பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவி, வெப்பம் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் தொடர்ந்து அழிவை ஏற்படுத்தி வருகிறது. இது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கிரீன்லாந்து உலகளாவிய கடல் மட்டத்தை குறைந்தபட்சம் 27 சென்டிமீட்டர் அல்லது 10.6 அங்குலங்கள் உயர்த்த இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

முந்தைய கணிப்புகளை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக தற்போதைய பனி மலைகள் உருகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இவற்றை ஜோம்பி ஐஸ் என்று அழைக்கப்படுகிறது. அதாவது, செயலற்று இருந்த இந்த பனி மலைகள், தடிமனான பனி மலைகளில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளன. தற்போது இந்த பனி மலைகளுடன் இணைத்துக் கொள்ள புதிய பனி மலைகள் எதுவும் உருவாகவில்லை. எனவே, இந்த பனி மலைகள் தற்போது உருகி வருகின்றன. இதற்கு காரணம் காலநிலை மாற்றம் என்று கூறப்படுகிறது. 

டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தின் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், '' இன்று உலகம் முழுவதும் புதை படிவ எரிபொருட்களை எரிப்பதை நிறுத்தினாலும், கிரீன்லாந்து பனிக்கட்டி இன்னும் 110 குவாட்ரில்லியன் டன் பனியை இழக்கும். இது சராசரியாக உலகளாவிய கடல் மட்டம் குறைந்தது 27 சென்டிமீட்டர் அளவிற்கு உயருவதற்கு வழிவகுக்கும்'' என்று தெரிவித்துள்ளனர்.

Amazon's Man of the Hole: பிரேசில் அமேசான் காட்டின் கடைசி மனிதரும் காலமானார்! பூர்வகுடிகள் இனி யாருமில்லை

"இந்த நூற்றாண்டிற்குள் இந்த சதவீதமும் இரட்டிப்பு ஆக வாய்ப்பு இருக்கிறது. புவி வெப்பமடைதல் தொடரும் என்று எதிர்பார்க்கக்கூடிய சூழ்நிலையில், கடல் மட்ட உயர்வுக்கு கிரீன்லாந்து பனி மலைகளின் பங்களிப்பு மட்டுமே காரணமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வறிக்கை பேராசிரியர் ஜேசன் பாக்ஸ் தலைமையில் நடந்துள்ளது. கடல் மட்டம் 30 சென்டிமீட்டர் வரை அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

கிரீன்லாந்தில் உள்ள மலைகளில் பனிப்பொழிவு கீழ் நோக்கி பாய்கிறது மற்றும் பனிப்பாறைகளின் பக்கங்களை தடிமனாக்குகிறது. விளிம்புகளில் உருகுவது சமநிலை அடைகிறது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக வெப்பம்  அதிகரித்து பனி மலை உருவாவதற்கு பதிலாக, உருகுதல் அதிகரித்து ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் என்னதான் மாசுபாட்டைக் குறைக்க, மாசுக்காற்றை குறைக்க நடவடிக்கை எடுத்தாலும், கிரீன்லாந்தின் மொத்த பனி அளவுகளில் 3.3% உருகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 

உலகின் 3வது பெரிய பணக்காரர் ஆனார் கவுதம் அதானி!

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!