ஆசியாவை தாக்கும் கொரோனா.. மீண்டும் வர காரணம் என்ன?

Published : May 17, 2025, 11:14 AM IST
Covid

சுருக்கம்

ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ்கள் அதிகரித்துள்ளன. புதிய கோவிட் அலையால் உலக நாடுகள் அனைத்தும் எச்சரிக்கையில் உள்ளன.

Why COVID -19 Cases Increase in Southeast Asian Countries : தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் கோவிட்-19 (COVID -19) புதிய அலை பரவி வருகிறது. ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற நகரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இது ஒரு வருடத்தில் முதல் பெரிய அதிகரிப்பாக இருக்கிறது என்று ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவித்துள்ளது.

ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் COVID -19 தாக்கம்:

ஹாங்காங்கில் கோவிட்-19 மிகவும் உயர்ந்த நிலைக்கு உயர்ந்துள்ளதாக சுகாதார பாதுகாப்பு மையத்தின் தொற்றுநோய் கிளையின் தலைவர் ஆல்பர்ட் கூறியுள்ளார். மே 3ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில், கோவிட்-19 வால் 31 இறப்புகள் ஹாங்காங்கில் பதிவாகி உள்ளன.

இதற்கிடையில் சிங்கப்பூரிலும் கோவிட் - 19 வழக்குகளில் 28% அதிகரித்துள்ளதாக பதிவாகியுள்ளது. மே முதல் வாரத்தில் கோவிட்-19 எண்ணிக்கையானது 14,200 எட்டியுள்ளது. அதே சமயத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோரின் எண்ணிக்கையானது சுமார் 30 சதவீதம் அதிகரித்துள்ளன.

தாய்லாந்து மற்றும் சீனாவில் COVID -19 தாக்கம்:

தாய்லாந்து, சீனாவிலும் இந்த COVID -19 அதிகரிப்பு காணப்படுகிறது. அதுவும் சீனாவில் கடந்த கோடை உச்சத்தில் காணப்பட்ட அளவை நெருங்கி வருகிறது. அதே சமயத்தில் தாய்லாந்திலும் தொற்றானது கொத்துக்களாக உருவாகியுள்ளது. குறிப்பாக, ஏப்ரல் மாதம் நடந்த சாங்க்ராங் திருவிழாவிற்கு பிறகு.

COVID -19 ஆல் இந்திய ஆபத்தில் உள்ளதா?

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் COVID -19 வேகமாக பரவி வருவகிறது. இந்த COVID -19 தொற்றானது எவ்வளவு தூரம் பரவக் கூடும் என்றும், இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டுமா? என்பது குறித்து கேள்விகளும் தற்போது எழுப்பப்படுகின்றன. இதுகுறித்து குடும்ப நல்ல அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ டேஸ்போர்ட்டின் படி, இந்தியாவில் தற்போது COVID -19 ஆல் 93 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. மேலும் இதுவரை நாட்டில் எந்தவொரு புதிய அலைக்கான அறிகுறிகள் ஏதுமில்லை. எனவே, COVID -19 குறித்து மக்கள் அசைப்பட தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர்.

COVID -19 மீண்டும் வர காரணம் என்ன?

கோவிட் -19 மீண்டும் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை;-

1. புதிய மாறுபாடுகள் - கொரோனா வைரஸ் ஆனது புதிய மாறுபாடுகளால் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்கள் அல்லது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று வர வாய்ப்பு அதிகம்.

2. தடுப்பூசி போடாமல் இருப்பது - பலர் தடுப்பூசி போடாமல் இருப்பதால், வைரஸ் பரவும் அபாயம் அதிகமாகவே இருக்கிறது.

3. சுகாதாரமின்மை - கைகளை கழுவாமல் இருப்பது, முக கவசம் அணியாமல் இருத்தல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருத்தல் போன்றவற்றால் வைரஸ் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளன.

4. அதிக கூட்டம் இருக்கும் இடங்கள் - மக்கள் அதிகம் கூடும் இடங்கள் பொதுப் போக்குவரத்து போன்ற பல இடங்களில் வைரஸ் பரவும் அபாயம் அதிகமாக இருக்கிறது.

5. அலட்சியம் - நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டினால் கண்டிப்பாக வைரஸ் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?
இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!