இந்தியாவுக்கு கிடைத்தது வெற்றி... லஷ்கர்-இ-தொய்பா தலைவனை பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா.!!

Published : Jan 18, 2023, 12:24 AM IST
இந்தியாவுக்கு கிடைத்தது வெற்றி... லஷ்கர்-இ-தொய்பா தலைவனை பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா.!!

சுருக்கம்

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவன் அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்துள்ளது. 

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவன் அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்துள்ளது. முன்னதாக பாகிஸ்தானில் அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவன் அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று இந்தியா ஐநாவில் வலியுறுத்தி வந்தது. ஆனால் இந்தியாவின் இந்த முயற்சியை சீனா தடுத்து வந்தது.

இதையும் படிங்க: டிகிரி படித்திருந்தால் போதும் இந்திய கடற்படையில் வேலை... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

இந்த நிலையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவன் அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்துள்ளது. இதுக்குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவன் அப்துல் ரஹ்மான் மக்கி (மும்பை, டெல்லி செங்கோட்டை மீதான தாக்குதலில் தொடர்புடையவன்), சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்படுகிறான்.

இதையும் படிங்க: 4 வயது சிறுவன் வயிற்றில் ப்ரேஸ்லெட்.. அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் !

அவன் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான அல்-கொய்தா, ஐஎஸ்ஐஎல்-வின் தொடர்பில் உள்ளவன் என்பது உறுதியாகி உள்ளது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கொண்டு வந்த தீர்மானம், ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் - 7ம் அத்தியாயத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு கிடைத்த பெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது. இதேபோல் அமெரிக்காவும் அப்துல் ரஹ்மான் மக்கியை பயங்கரவாதி பட்டியலில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு