குப்பை மேடாக மாறிய பிரிட்டன் நகரம்! சாலையில் குவிந்த 17,000 டன் குப்பை!

Published : Apr 06, 2025, 11:24 AM IST
குப்பை மேடாக மாறிய பிரிட்டன் நகரம்! சாலையில் குவிந்த 17,000 டன் குப்பை!

சுருக்கம்

பிரிட்டனில் பர்மிங்காம் நகரில் குப்பைகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள். துப்புரவுத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் நகரம் முழுவதும் குப்பை குவிந்து கிடக்கின்றன.

பிரிட்டனின் பர்மிங்காம் நகரம் தற்போது குப்பை மேடாக மாறியுள்ளது. இது நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும், ஆனால் தற்போது இதன் நிலை மிகவும் மோசமாக உள்ளது. சாலைகளில் சுமார் 17,000 டன் குப்பை குவிந்துள்ளது. எங்கு பார்த்தாலும் அழுகிய குப்பை, துர்நாற்றம், எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் மலிந்து கிடக்கின்றன. பர்மிங்காம் இப்போது குப்பைகளின் தலைநகரமாகிவிட்டது என்று மக்கள் கூறுகிறார்கள்.

அதிகாரிகள், தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்:

நகராட்சி அதிகாரிகளுக்கும், துப்புரவுப் பணியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட வேலை நிறுத்தப் போராட்டமே இதற்குக் காரணம். இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதால், துப்புரவுப் பணி ஸ்தம்பித்தது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். குழந்தைகள், முதியவர்கள் நோய்வாய்ப்படத் தொடங்கியுள்ளனர். துப்புரவுப் பணியை மேற்கொள்ள வேண்டியவர்கள் நாற்காலி சண்டையில் ஈடுபட்டுள்ளதால் மக்கள் கோபத்தில் உள்ளனர்.

ஜனவரி முதல் நடந்த ஸ்டிரைக்:

பிரிட்டனின் பர்மிங்காம் நகரில் குப்பை நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குப்பை சேகரிக்கும் 350க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஜனவரி மாதம் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய திட்டம் தங்கள் சம்பளத்தில் பெரும் குறைப்பை ஏற்படுத்துவதாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் கூறுகின்றனர். இதனால் தங்களுக்கு சுமார் 8,000 பவுண்டுகள் வரை இழப்பு ஏற்படும் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதே நேரத்தில், இந்த பாதிப்பு 17 ஊழியர்களுக்கு மட்டுமே ஏற்படும் என்றும், இழப்பு 6,000 பவுண்டுகளுக்கு மேல் இருக்காது என்றும் நகராட்சி நிர்வாகம் கூறுகிறது.

சுகாதாரப் பிரச்சினை:

சாலைகளில் குப்பை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் பெரும் விலை கொடுக்க வேண்டியுள்ளது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள், ஆனால் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இந்த நெருக்கடி இப்போது பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தை எட்டியுள்ளது. அங்கு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் ஆரோக்கியம் மற்றும் நகரத்தின் குப்பை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
நண்பேன்டா.. ரஷ்ய அதிபர் புடினை விமான நிலையத்துக்கே சென்று வரவேற்ற பிரதமர் மோடி!